Connect with us

இந்தியா

11 வருடங்களாக மனைவியை பூட்டி வைத்த வழக்கறிஞர்.. நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

Published

on

11 வருடங்களாக தனது மனைவியை வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் பூட்டி வைத்திருந்த நிலையில் நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக அந்த பெண் தற்போது விடுதலை பெற்றுள்ளார்

ஆந்திராவைச் சேர்ந்த சுப்ரியா என்ற பெண்ணுக்கும் வழக்கறிஞர் தொழில் செய்யும் மதுசூதனன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் திருமணம் ஆன சில ஆண்டுகள் மட்டும் பெங்களூரில் இருந்த இந்த தம்பதிகள், அதன்பின் மதுசூதனனின் தந்தை வீடு இருக்கும் விஜயநகரத்துக்கு குடி பெயர்ந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சுப்ரியாவை அவரது கணவர் மதுசூதனன் மற்றும் அவரது பெற்றோர் வீட்டுக்குள் பூட்டி வைத்திருந்ததாகவும் சுப்ரியாவின் பெற்றோர்களை கூட பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. சுப்ரியாவுக்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்த போதிலும் தங்களது பேரக்குழந்தைகளை கூட தனது மருமகன் பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் சுப்ரியாவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தங்களது மகள் பூட்டி வைக்கப்பட்டிருக்கிறார் என்று சந்தேகம் கொள்வதாகவும் அவர் சித்தரவதை செய்யப்படுவதாகவும் சுப்ரியாவின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.. இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து மதுசூதனன் வீட்டை சோதனை செய்யுமாறு உத்தரவிட்டது. இதனை அடுத்து போலீசார் மதுசூதனன் வீட்டை சோதனை செய்தபோது 11 ஆண்டுகள் சுப்ரியா வீட்டில் ஒரே அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் இந்த 11 ஆண்டுகளில் ஒரு சில முறை மட்டுமே மாமியார் உடன் வெளியே சென்றதாகவும் பெரும்பாலான நாட்கள் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிகிறது. இரண்டு பேரக் குழந்தைகளை கூட அம்மாவை சந்திக்க விடுவதில்லை என்றும் சுப்ரியாவின் பெற்றோர்களையும் சந்திக்க விடவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்தது

இதனை அடுத்து சுப்ரியாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது பிரிவுகள் 498A (ஒரு பெண்ணின் கணவரின் கணவர் அல்லது உறவினர் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர்), 343 (மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு தவறான சிறைவைப்பு), 346 (ரகசியமாக சிறையில் வைத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுப்ரியாவின் தாயார் ஹேமலதா கூறுகையில், தனது மகளின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது, ஆனால் தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளதால் மகள் குணமடைவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

சினிமா10 hours ago

SSMB28-வது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மகேஷ் பாபு!

சினிமா10 hours ago

விஜே சித்ரா போன்றே ஹோட்டல் ரூமில் இளம் நடிகை தற்கொலை; ரசிகர்கள் ஷாக்!

வேலைவாய்ப்பு11 hours ago

IGNOU பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 200

இந்தியா11 hours ago

தாய்மொழியில் மருத்துவக் கல்வி: பிரதமர் மோடி பேச்சு!

வேலைவாய்ப்பு12 hours ago

டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு BSNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு12 hours ago

இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

samantha
சினிமா12 hours ago

மையோசிடிஸ் பாதிப்பு: குணமடைந்தாரா சமந்தா?

சினிமா12 hours ago

’கரகாட்டக்காரன்2’ படத்தில் மிர்ச்சி சிவா?

சினிமா12 hours ago

’லியோ’ அப்டேட்; கெளதம் மேனனிடம் கறார் காட்டிய கெளதம் மேனன்!

ஆரோக்கியம்17 hours ago

சிக்கன் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா…!

வேலைவாய்ப்பு6 days ago

தமிழ்நாடு பொதுப்பணி துறையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 500

வணிகம்7 days ago

இன்று தங்கம் விலை மாற்றமில்லை (20/03/2023)!

வேலைவாய்ப்பு4 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

உலகம்7 days ago

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

உலகம்7 days ago

ஏப்ரல் 1 முதல் 4000 ஊழியர்களின் வேலை காலி? பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி முடிவு..!

வேலைவாய்ப்பு7 days ago

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்6 days ago

அமேசானின் அடுத்தகட்ட வேலைநிக்கம்.. 9000 பேர்கள் வேலை காலியா?

ugc
வேலைவாய்ப்பு6 days ago

ரூ.2,10,000/- ஊதியத்தில் UGC – ல் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 868

உலகம்7 days ago

ஆப்பிரிக்கா கண்டம் இரண்டாக பிரிகிறதா? புதிய கடல் உருவாகிறதா? ஆய்வாளர்களின் அதிர்ச்சி அறிக்கை..!