வணிகம்
8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 106% ஊதிய உயர்வு? விரைவில் அமலுக்கு வரலாம்!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய தகவல் வெளியாகியுள்ளது. 8வது ஊதியக்குழு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு ஜனவரி மாதம் வெளியிட்டது. தற்போது, இந்த குழு அமைக்கப்பட்டு, 2026-ம் ஆண்டு பாதிக்குள் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது. 2027 ஜனவரியில் இருந்து புதிய ஊதியக் குழு அமலுக்கு வரலாம்.
இது நடைமுறைக்கு வந்தால், ஊதியத்தில் சுமார் 106% வரை உயர்வு கிடைக்கும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். இது மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் பெரும் நிவாரணமாக அமையும்.
7வது ஊதியக் குழுவின் கீழ், குறைந்தபட்ச சம்பளம் ரூ.7,000-இல் இருந்து ரூ.18,000-ஆக உயர்த்தப்பட்டது. அதேபோல், இந்த முறை ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.57 அல்லது 2.86 வரை பரிந்துரைக்கப்படும் என கூறப்படுகிறது. இதன்படி, தற்போதைய ரூ.18,000 அடிப்படை சம்பளம் ரூ.37,080 வரை உயரக்கூடும். ஓய்வூதியமும் ரூ.9,000-இல் இருந்து ரூ.18,540 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்பது பழைய சம்பளத்தில் பெருக்கிப் பெறப்படும் அடிப்படை சம்பளத்தைக் குறிப்பிடுகிறது. இது ஊழியர் சம்பள மாற்றத்தின் முக்கிய கருவியாக செயல்படுகிறது.
அதிகரிப்பு ஜனவரி 2026 முதல் நிலுவைத் தொகையாக வழங்கப்படும். இதன் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இந்த மாற்றம் பணவீக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகவும், எதிர்கால நிதி நிலைப்பாட்டை உறுதிப்படுத்தக்கூடியதாகவும் இருக்கும்.



















