இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.06.2026

- சூரியனில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த சூரியப் பேரலை வெடிப்பை நாசாவின் SDO விண்கலம் துல்லியமாகப் படம் பிடித்துள்ளது. இது மிக ஆபத்தான X 1.0 Class வெடிப்பாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இத்தகைய வெடிப்புகள் புமியின் தகவல் தொடர்பு மின்சார க்ரிட்கள் GPS சிக்னல்களை பாதிக்கும் என்றும் எச்சரிக்கை.
- டிரோன்கள் ராக்கெட்டுகளை கண நேரத்தில் சாம்பலாக்கும் Iron Beam தொழில்நுட்பம்! அச்சுறுத்தல்களை தகர்க்கும் அடுத்த தலைமுறை லேசர் ஆயுதத்தை இந்தியாவுக்கு இஸ்ரேல் அநிமுகப்படுத்தியுள்ளது. உலகின் அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை முதலில் பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது.
- ஓமன் கடல் பரப்பில் இருந்த அமெரிக்கவின் ஒரு போர் கப்பலை ஈரான் நிர்மூலமாக்கியது. ஹிஸ்புல்லா வடக்கு இஸ்ரேலின் மீது 100 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவியுள்ளது. குவைத், பஹ்ரைன், சவூதி நாடுகளில் உள்ள அமெரிக்காவின் பல்வேறு ராணுவ நிலைகளை இலக்கு வைத்து நேற்றைய இரவு இன்றைய அதிகாலை என மாறி மாறி தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான்.
- மதுரை மீனாட்சி கோயில் குடமுழுக்கில் சமஸ்கிருத்த்துக்கு இணையாக தமிழையும் பயன்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் இறுதி தீர்ப்பு தமிழிலேயே வெளியிடப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
- அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது தொடர்பாக நாளை தனது அறிவிப்பை வெளியிடுவார்.
- காக்ரோச் ஜனதா பார்ட்டி தனது செய்தித் தொடர்பாளர்களாக 3 பேரை அறிவித்துள்ளது. 6ம் தேதி அதன் நிறுவனர் இந்தியாவிற்கு வருகிறார். அன்று டெல்லி ஜந்தர் மந்தரில் பாஜக அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்யக் கோரி மிகப் பெரிய இளைஞர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
- தமிழ்நாடு பத்திரப் பதிவுத் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக 6 மாவட்ட பதிவாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். 43 சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என பத்திரப் பதிவுத் துறை ஐஜி தெரிவித்துள்ளார்.
- செள்ளை அண்ணாசாலை மின்வாரிய தலைமையகத்தில் மின்சார டெண்டர் ஆவணங்கள் அடங்கிய 10 ஹார்டு டிஸ்குகள் மாயம். நிலக்கரி கொள்முதல் தொடர்பான முக்கிய ரகசிய தகவல்கள் அடங்கிய ஹார்டு டிஸ்குகள்கடந்த 16 மற்றும் 17 தேதிகளில் திருடு போயுள்ளன.சிந்தாதிரிப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை.
- கடன்தொகை சமரசமாகத் தீர்க்கப்பட்டால் குற்றவியல் வழக்குகள் தொடரக்கூடாது. – சுப்ரீம் கோர்ட் உத்தரவு.














