இந்தியா
ஊரடங்கிற்குப் பிறகு புலம்பெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லும் முதல் ரயில்!
மத்திய உள்துறை அமைச்சகம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்காக அரசாணையை வெளியிட்டதை அடுத்து, தெலுங்கானாவிலிருந்து ஜார்கண்டுக்கு 1200 பயணிகளுடன் முதல் ரயில் புறப்பட்டுள்ளது.
காலை 4:50 மணிக்குத் தெலுங்கானாவின் லிங்கப்பள்ளியில் இருந்து 1200 புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் புறப்பட்ட ரயிலானது ஜார்கண்ட்டின் ஹட்டியா வரை செல்கிறது.
24 பெட்டிகள் கொண்ட இந்த ஒரு ரயில் மட்டும் தான் புலம் பெயர்ந்த தொழிலாளர்களைச் சொந்த ஊர்களுக்குக் கொண்டு சேர்க்கும் சோதனை ஓட்டம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இப்படி ரயிலில் அழைத்துச் செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சமூக இடைவெளி, சானடைசர், மாஸ்க் உள்ளிட்ட வசதிகளும் ரயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்ற பிறகு அங்கு அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
https://seithichurul.com/news/india/home-affairs-allowed-movement-of-stranded-migrant-workers-tourists-students-pilgrims-and-others/22518/