தமிழ்நாடு
பொதுத்தேர்வு ரத்து, 1-9 வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: புதுவை அரசு அறிவிப்பு!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் ஏற்கனவே பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்தை அடுத்து புதுவையிலும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புதுவை மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் இன்று தெரிவித்த உத்தரவு ஒன்றில், புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்வு இன்றி தேர்ச்சி என அறிவித்துள்ளார். மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனையடுத்து அம்மாநில மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதையடுத்து தேர்வு நடத்துவது என்பது சாத்தியமில்லாதது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் அதே நேரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.