தமிழ்நாடு
தீவிரமாக நடக்கும் 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள்.. ஹால் டிக்கெட் விதியில் திடீரென செய்யப்பட்ட மாற்றம்

சென்னை: தமிழ்நாடு முழுக்க 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வு நடக்கும் நிலையில் பொதுத்தேர்வு அனுமதியில் புதிய மாற்றம் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
கடந்த மார்ச் 13ம் தேதி 12 -ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. ஏப்ரல் மாதம் 3 ஆம் நாள் வரை இந்த தேர்வுகள் இடைவெளியுடன் நடக்க உள்ளது. புதுச்சேரியிலும் தேர்வு நடந்து வருகிறது.
கடந்த மார்ச் 14ம் தேதி 11ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கின. ஏப்ரல் 5ம் தேதி வரை 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடக்க உள்ளது.
இந்த நிலையில் தேர்வுகளுக்காக மாணவர்கள் தீவிரமாக படித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுக்க 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தற்போது பொதுத்தேர்வு நடந்து கொண்டு இருக்கிறது. தமிழ்நாடு முழுக்க 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ – மாணவிகள் இந்த தேர்வை எழுதி வருகின்றனர். ஆனால் அதிர்ச்சி தரும் விதமாக தமிழ்நாட்டில் இந்த தேர்வை இந்த முறை பலர் எழுதவில்லை.
எத்தனை பேர்
தமிழ் பாடத்தாளை 50 ஆயிரம் பேர் எழுதவில்லை.
ஆங்கிலத்தை 49 ஆயிரம் பேர் எழுதவில்லை.
தமிழ்நாடு முழுக்க 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வு நடக்கும் நிலையில் பொதுத்தேர்வு அனுமதியில் புதிய மாற்றம் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மாணவர்கள் எளிதாக பள்ளிகளுக்கு தேர்வு எழுத வரும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன,
பள்ளிகளுக்கு குறைந்தபட்ச வருகை பதிவு இருந்தால் தான் தேர்வு எழுத முடியும் என்ற நிலையில் மாற்றம் செய்யப்படுகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ்கூறியுள்ளார் . அதேபோல் ஆண்டிற்கு 2நா ட்கள் வருகை தந்தாலும், மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இரண்டு அல்லது மூன்று நாள் பள்ளிகளுக்கு வந்தாலே கூட ஹால் டிக்கெட் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது .