Connect with us

தமிழ்நாடு

சென்னை – புதுவை முதல் சரக்கு கப்பல்.. தென்மாவட்ட தொழிலதிபர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்..!

Published

on

சென்னை – புதுவை இடையே சரக்கு கப்பல் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து முதல் கப்பல் புதுவைக்கு நேற்று வந்தடைந்தது. இந்த நிலையில் இந்த சேவை தென் மாவட்ட தொழில் அதிபர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை துறைமுகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து இந்த இரு நகரங்களுக்கு இடையே கப்பல் செல்வதற்காக ரூபாய் 40 கோடியில் துறைமுகம் ஆழப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து சமீபத்தில் இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு புதுவையில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு சோதனைக்கு கப்பல் சென்றது. இந்த சோதனை கப்பல் வெற்றி கரமாக சென்னை வந்தடைந்ததை அடுத்து சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை சமீபத்தில் தொடங்கியது.

குளோபல் லாஜிஸ்டிக் என்று நிறுவனத்தைச் சேர்ந்த ஹோப் செவன்’ என்ற கப்பல் வாரத்திற்கு இரண்டு முறை சென்னை புதுச்சேரி இடையே சரக்குகளை ஏற்று செல்லும் என்றும் இந்த இரு நகரங்களை கடப்பதற்கு 12 மணி நேரம் மட்டுமே பயண நேரமாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த கப்பலில் மொத்தம் 106 கண்டெய்னர்கள்களை ஏற்றி வந்தது என்றும், அதில் அதில் 20 குளிரூட்டப்பட்ட கண்டைனர்கள்கள் என்றும் கூறப்படுகிறது. சென்னை புதுச்சேரி சரக்கு கப்பல் சேவை தென்மாவட்ட தொழிலதிபருக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று கூறப்படுகிறது. தென் மாவட்டத்தில் தயார்செய்யப்படும் பொருள்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றால் புதுவை வரை கண்டெய்னர்களில் கொண்டு வந்து அதன்பின் சிறிய கப்பல்கள் மூலம் சென்னை துறைமுகத்திற்கு செல்லும் அல்லது புதுவையில் இருந்து கண்டெய்னர் மூலம் சென்னைக்கு செல்லும்.

கண்டெய்னர் மூலம் சென்னைக்கு செல்வதால் ஒரு கண்டெய்னருக்கு ரூ.30,000 செலவு ஆவது மட்டுமின்றி சென்னை புதுவை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல் புதுவையில் இருந்து நேரடியாக சென்னை துறைமுகத்திற்கு கண்டனர் செல்லும் என்பதால் தென் மாவட்ட தொழிலதிபர்கள் தங்களது தயாரிப்புகளை புதுவை வரை கண்டெய்னர்கள்களில் கொண்டு வந்தால் போதும் அதன் பின் இந்த கப்பலில் கொண்டு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பயண நேரம் மிச்சம் ஆவதும் பொருள் செல்லவும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் புதுவை துறைமுகத்தில் கண்டெய்னர்களை ஏற்றி இறக்கும் வேலை நடைபெறுவதால் அந்த பகுதியில் உள்ள ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?