இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 28.02.2026

- இன்று மாலை உலகெங்கிலும் உள்ள மக்கள் வானில் ஒரு அரிய நிகழ்வை காண உள்ளனர். புதன்(மெர்க்குரி), வெள்ளி (வீனஸ்), சனி (சேட்டர்ன்), நெப்டியுன், யுரேனஸ் மற்றம் வியாழன் (ஜீபிடர்) ஆகிய ஆறு கோள்களும் சூரிய மறைவிற்கு பின் 30 முதல் 60 நிமிடங்களுக்குள் ஒரே நேர்க்கொட்டில் தோன்றும் பிளானட் பரேட் என்ற நிகழ்வு இன்று அரங்கேறுகிறது. வியாழன் மற்றம் வெள்ளி ஆகியவற்றை வெறும் கண்களாலும் மற்றவற்றை பைனாகுலர் கொண்டும் பார்க்கலாம். இன்று தவற விட்டால் மீண்டும் 2040 ல் தான்.
- வடகொரியாவில் ஒரு நபர் அரசியலில் தவறு செய்தால் மூன்ற தலைமுறை தண்டனை அதாவது அவர் மட்டும் அல்லாமல் அவரின் குடும்ப உறுப்பினர்களான பெற்றோர் மற்றும் குழந்தைகளும் தண்டனை அல்லது சிறை வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இது மனித உரிமை குறித்த விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
- ஈரான் தலைநகர் டெவற்ரானை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்கதல் நடத்தி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல ஈரான் அரசு வலியுறுத்தல்.
- அரசியலமைப்பு சட்டத்தின் 21 வது பிரிவின் கீழ் பாஸ்போர்ட் வைத்திருப்பது வெளிநாடு செல்வது தனிப்பட்ட சுதந்திரம் – டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து
- ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்! ஈரான் அதிபர் அலுவலகம், உச்சத் தலைவரின் வளாகம், புலனாய்வு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், அணுசக்தி நிறுவனம் உள்ளிட்டவைகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.
- இந்தியாவில் சுமார் 5 கோடி வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. பல வழக்குள் 10 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கின்றன.




