Connect with us

உலகம்

மோடி அமைச்சரவையில் உள்நோக்கத்துடன் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து பிரதமராக மோடி நேற்று இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருடன் சேர்ந்து மேலும் 57 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

25 கேபினட் அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள், 9 தனிப்பொறுப்புடன் கூடிய சிறப்பு அமைச்சர்கள் என மொத்தம் 58 பேர் நேற்று பதவியேற்றனர். ஆனால் இதில் தமிழகத்தில் கூட்டணி கட்சியான அதிமுகவை சேர்ந்த யாரும் அமைச்சராக பதவியேற்கவில்லை. இதனால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது. இந்நிலையில் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தான் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சரவையில் பாஜகவோடு கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட அதிமுக சார்பாக எவரும் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. மக்களவையில் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தாலும் ஏற்கெனவே மாநிலங்களவையில் 13 உறுப்பினர்களை அதிமுக பெற்றிருக்கிறது. இவர்களது ஆதரவு என்பது மத்திய பாஜக அரசுக்கு மிகமிக அவசியமாகும். ஆனாலும், அதிமுகவிலிருந்து எவரையும் மத்திய அமைச்சரவையில் சேர்க்காமல் புறக்கணித்திருப்பதற்கான காரணங்கள் என்ன என்பது தெரியவில்லை.

இதன்மூலம் அதிமுகவை மட்டுமல்ல, தமிழகத்தையும் புறக்கணித்திருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது. மோடிக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு அலை வீசிய காரணத்தால் இத்தகைய புறக்கணிப்பு நடைபெற்றிருப்பதாகவே எண்ண தோன்றுகிறது. அதிமுகவை புறக்கணித்திருந்தாலும், பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரில் ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக்கி மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கியிருக்கலாம்.

கேரளாவிற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பதற்காக வி.முரளிதரனுக்கு மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு அமைச்சராக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதைப்போல தமிழகத்திற்கும் வாய்ப்பு வழங்கியிருக்கலாம்.

மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றிருக்கிற நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரை தமிழர்கள் என்று கூறினாலும், தமிழக மக்களோடு தொடர்பில்லாத இவர்களை தமிழகத்தின் பிரதிநிதிகளாக கருத முடியாது. எனவே, ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முழு பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி தான் என தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

30 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் சனி–புதன் நவபஞ்சம ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பண அதிர்ஷ்டம் குவியும்!

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

2026 ராசிபலன்: லட்சுமி தேவியின் பரிபூரண அருளால் செல்வம் குவிக்கும் ராசிகள் – உங்கள் ராசி இதில் உள்ளதா?

செய்திகள்5 மணி நேரங்கள் ago

தமிழக பழங்குடியினர் புத்தாய்வு உதவித்தொகை: கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 – எப்படி விண்ணப்பிக்கலாம்?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

புதன் விருச்சிகத்தில் அஸ்தமனம்: நவம்பர் 12 முதல் அதிர்ஷ்டம் மலரப் போகும் இந்த ராசிகள்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

10 ஆண்டுகள் பிறகு ராகு சதய நட்சத்திரத்துக்கு வருகை: மேஷம் முதல் கும்பம் வரை இந்த 5 ராசிக்காரர்கள் ஜாக்பாட் அடிக்கப் போகிறார்கள்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ராகு-கேது பெயர்ச்சி 2026: ரிஷபம், துலாம், தனுசு ராசிகளுக்கு அதிர்ஷ்டம் குவியும்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

2026 ராகு–கேது பெயர்ச்சி: அதிர்ஷ்டம் அடிக்கும் 3 ராசிகள் – தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம்!

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு பெரிய வருவாய் உயர்வு: லெவல் 1–6 ஊழியர்களுக்கு மாபெரும் நன்மைகள்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

லட்சுமி நாராயண ராஜயோகம் உருவானது: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பொங்கப் போகிறது!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: ஏன் இனி விண்ணப்பிக்க முடியாது? தகுதியான பெண்கள் தவறவிட்ட முக்கிய வாய்ப்பு!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (09/11/2025)!

வணிகம்6 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் – பெற்றோர் ஆயுள் சான்றிதழ் குறித்து புதிய விதி அறிவிப்பு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

09 நவம்பர் 2025 தமிழ் பஞ்சாங்கம் – இன்றைய நல்ல நேரம், ராகுகாலம், திதி, நட்சத்திரம் விவரங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 30% சம்பள உயர்வு? போனஸ், கிராச்சுவிட்டி, ஓய்வூதியத்தில் பெரும் நன்மைகள்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்6 நாட்கள் ago

2025 நவம்பர் 09 முதல் 15 வரை வார ராசி பலன்கள் – 12 ராசிக்காரர்களுக்கான முழுமையான ஜோதிட முன்னறிவிப்பு!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு 2025: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி! சம்பள உயர்வு, போனஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட பல நன்மைகள் காத்திருக்கின்றன!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

2025 நவம்பர் 11 தமிழ் பஞ்சாங்கம்: இன்றைய திதி, நட்சத்திரம், யோகம், ராகுகாலம் – முழு விவரம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

கடக ராசியில் குருவின் வக்ரப் பயணம் 2025: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் வெற்றி கிட்டும்!

வணிகம்4 நாட்கள் ago

தெலங்கானாவில் கிங்ஃபிஷர் பீர் விநியோகம் நிறுத்தம் – மால்யாவின் வீழ்ச்சி மீண்டும் நினைவில்!

வணிகம்4 நாட்கள் ago

தங்க நகைக்கடனுக்கு புதிய கட்டுப்பாடுகள் – ரிசர்வ் வங்கியின் 9 முக்கிய வழிகாட்டுதல்கள் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது!

Translate »