Connect with us

இந்தியா

சட்டவிரோதமாக 250 சீனர்களுக்கு விசா: இதுதான் ப.சிதம்பரம் வீட்டின் சோதனைக்கு காரணமா?

Published

on

சட்டவிரோதமாக 250 சீனர்களுக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு கார்த்தி சிதம்பரம் விசா வாங்கி கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் இன்று அவருடைய வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் வீடுகளில் இன்று காலை 6 மணி முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் .

சென்னையில் உள்ள சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்கள், டெல்லியில் உள்ள வீடு, சிவகெங்கையில் உள்ள வீடு ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் பல குழுக்களாகப் பிரித்து சோதனை நடந்து வருகிறது.

இந்த நிலையில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ப சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது 250 சீனர்களுக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு முறைகேடாக விசா வழங்கப்பட்டுள்ளதாகவும் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட இந்த விசாக்களில் உள்ள முறைகேடுகளை அடுத்தே சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

250 சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கியதில் கார்த்திக் சிதம்பரம் 50 லட்சம் லஞ்சம் பெற்றுள்ளதாகவும் சிபிஐ அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?