Connect with us

இந்தியா

Kargil Vijay Diwas: கார்கில் போர் வெற்றி தினம்.. இந்திய ராணுவம் பாகிஸ்தான் வீரர்களை துவம்சம் செய்த தினம்!

Published

on

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.

கார்கில் விஜய் திவாஸ் அல்லது கார்கில் போர் வெற்றி தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது?

1999-ம் ஆண்டு நடுங்கும் குளிரில் இந்திய எல்லைப் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தினரை எதிர்த்துப் போரிட்டு நாட்டுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த ராணுவ வீரர்களைப் பெருமைப் படுத்தும் விதமாகக் கொண்டாடப்படும் நாளே கார்கில் விஜய திவாஸ் என அழைக்கப்படும் கார்கில் போர் வெற்றி தினம்.

கடந்த 23 ஆண்டுகளாக கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய வரலாற்றில் 1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போர்தான் மிகவும் தீவரமாக நடைபெற்ற போர் ஆகும். 1999-ம் ஆண்டு மே 3-ம் தேதி தொடங்கி ஜூலை 26-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போருக்கு ஆப்ரேஷன் விஜய் என பெயரிடப்பட்டது. 3 கட்டங்களாக இந்த போர் நடைபெற்றது.

இந்த போர் முழுவதும் கடுமையான பனிப் பொழிவு இருக்கும் பகுதிகளில் நடந்தது. இந்தியா இமைய மலைக்குக் கீழ் இருக்கும் நிலையில், மேல் இருந்து தாக்கும் பாகிஸ்தானுக்குச் சாதகமான போராக இருந்தது. இருப்பினும் இந்திய ராணுவம் பாகிஸ்தான் இராணுவத்தைத் திறம்பட எதிர்த்து ஜூலை 26-ம் தேதி வெற்றியை நிலை நாட்டியது. போரின் போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒட்டுமொத்த தேசமும் ராணுவ வீரர்களுக்குத் துணையாக நின்றது.

போரின் போது 527 வீரர்களை இந்திய ராணுவம் இழந்தது. 1,363 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் 700 கொல்லப்பட்டனர். தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் சரவணன் உள்ளிட்ட பல்வேறு ராணுவ வீரர்கள் நாட்டுக்காக தங்களது உயிரை தியாகம் செய்ததற்கா பெருமைப்படுத்தப்பட்டனர்.

இந்த ஆண்டு ஜூலை 26-ம் தேதி நாட்டுக்காக தங்களது உயிரை வீரப் போரிட்டு தியாகம் செய்தவர்களுக்கும், எல்லையில் இன்றும் நமது தேசத்தைக் காத்து வரும் அனைத்து ராணுவ வீரர்களுக்கும் சேர்த்து வீர வணக்கம் செலுத்துவோம்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?