கிசு கிசு
ஈஸ்வரன் படத்தை பொங்கலுக்கு வெளியிட முடியாது.. திரை அரங்கு உரிமையாளர்கள் அதிரடி அறிவிப்பு!

சிம்பு நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருந்த திரைப்படம் ஈஸ்வரன். சிம்பு நடிப்பில் குறைந்த காலத்தில் தயாரான ஈஸ்வரன் கண்டிப்பாகத் திரை அரங்குகளில் தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் திரை அரங்குகளில் ஈஸ்வரன் படம் வெளியானாலும் கோரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் படம் வெளியாவதில் சிக்கல் இருந்து வந்தது.
எனவே இந்தியாவில் திரை அரங்குகளிலும், வெளிநாடுகளில் ஓடிடி தளத்தில் ஜனவரி 14-ம் தேதி ஈஸ்வரன் படம் வெளியாகும் என்று படக்குழுவினர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

அதை பார்த்து அதிர்ச்சியடைந்த திரை அரங்கு உரிமையாளர்கள், ஈஸ்வரன் படத்தைத் திரையரங்கு மற்றும் ஒடிடி வெளியாவதை அனுமதித்தால், அனைத்து திரைப்படங்களும் இதுபோல முடிவெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
இது நமது வாழ்வாதார பிரச்சனை திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் என்று தெரிவித்துள்ளார்.
சிம்பு படம் என்றாலே வெளியாவதில் சிக்கல்தான். முன்பு அது சிம்புவால் நடந்தது. இப்போது அது தயாரிப்பாளரால் நடந்துவிடும் போல. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் விரைவில் ஈஸ்வரன் படக் குழுவினர் இது குறித்து நல்ல முடிவை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




















