கிசு கிசு
முத்தக்காட்சியில் நடிக்க சொன்ன இயக்குநர்.. சாய் பல்லவியை காப்பாற்றிய நடிகர்!!
#MeToo இயக்கம் மூலம் முத்தக்காட்சியில் இருந்து தப்பித்துக்கொண்டதாக நடிகை சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அறிமுகமாகி, ரவுடி பேபி மூலம் நாடு முழுவதும் பல ரசிகர்களைக் கவர்ந்த நடிகை சாய் பல்லவி. இவர் அண்மையில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலுக்குப் பேட்டியளித்திருந்தார்.
அதில் பேசிய அவர், ‘படபிடிப்பு தளத்தில் இயக்குநர் ஒருவர் (பெயர் குறிப்பிடவில்லை) நகைச்சுவைக்காக முத்தக்காட்சியில் நடிக்கலாமே என வேடிக்கையாகச் சொன்னார். அந்த நேரத்தில் அருகிலிருந்த நடிகர் ஒருவர், நீங்கள் இப்படி சொன்னால் சாய் பல்லவி மீ டு ஹேஸ்டேக்கில் உங்களை போட்டுக் கொடுத்துவிடுவார் என்றார்.
அந்த நடிகரும் வேடிக்கையாகத் தான் சொன்னார். உண்மையில் நான் அவ்வாறு செய்ய மாட்டேன். அதே சமயம் முத்தக்காட்சியிலும் நடிப்பது எனக்கு பிடிக்காது’. இவ்வாறு சாய்பல்லவி வேடிக்கையாக பேசினார்.