Connect with us

கிரிக்கெட்

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்: இருமல் மருந்தால் நேர்ந்த விபரீதம்!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான இளம் கிரிக்கெட் வீரரான ப்ரித்வி ஷா ஊக்க மருந்து சோதனையில் சிக்கி, அதில் அவர் ஊக்க மருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்தாக் அலி கோப்பையில் பங்கேற்ற இளம் வீரர் பிரித்வி ஷா தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை உபயோகித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து பலகட்ட சோதனைகளை நடத்திய மும்பை கிரிக்கெட் சங்கம் பிரித்வி ஷா ஊக்கமருந்து உட்கொண்டதை உறுதி செய்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தது.

இதனையடுத்து பிரித்வி ஷா 8 மாதங்கள் வரை அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள பிரித்வி ஷா, என் விஷயத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

முஸ்தாக் அலி கோப்பைக்கான தொடரில் நான் மும்பை அணிக்காக விளையாடிய போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது நான் எடுத்துக்கொண்ட இருமல் சிரப்பில் தான் தடைசெய்யப்பட்ட வேதிபொருள் இருப்பதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி மருந்தை உட்கொண்டதால் தான் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறேன்.

எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாதவாறு மிகவும் கவனமுடன் செயல்படுவேன். கிரிக்கெட் தான் என் வாழ்க்கை, இந்திய அணிக்காக விளையாடுவதை தவிர எனக்கு எந்த பெருமையும் இல்லை. விரைவில் இந்த சூழலில் இருந்து மீள்வேன் என தெரிவித்துள்ளார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?