Connect with us

கிரிக்கெட்

பிளே ஆப், பைனல் போட்டியில் மழை பெய்தால் என்ன நடக்கும்? புதிய விதிகள் அறிவிப்பு

Published

on

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது பிளே ஆப் மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிளே ஆப்போட்டிகள் நடக்கும் சமயத்தில் மழை பெய்யும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதே போல் அகமதாபாத் மைதானத்தில் இறுதிப் போட்டி நடக்கும் போது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .

இந்த நிலையில் பிளே ஆப்போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன செய்யலாம் என்பது குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது .

பிளே ஆப்போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்ட ஓவர்கள் குறைக்கப்படும் என்றும் ஐந்து ஓவர்கள் கூட போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் ஒரே ஒரு சூப்பர் ஓவர் மூலம் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை சூப்பர் ஓவர் போட்டியும் நடத்த முடியவில்லை என்றால் லீக் போட்டிகளில் அந்த அணிகள் பெற்ற வெற்றிகளை கணக்கில் கொண்டு முடிவு அறிவிக்கப்படும்.

இறுதிப் போட்டியை பொறுத்தவரை மழை பெய்தால் அடுத்த நாள் நடத்தலாம் என்பதற்காக ரிசர்வ் நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவ்து மே 29-ஆம் தேதி இறுதிப் போட்டி மழை காரணமாக ரத்தானால் மே 30ஆம் தேதி நடத்தப்படும்.

அதேபோல் முதல் பாதி போட்டி முடிவடைந்த பின் இரண்டாவது பாதியில் மட்டும் நடத்த விடாமல் மழை பெய்தால் மறுநாள் இரண்டாவது பாதி மட்டும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

இறுதிப் போட்டியிலும் மழை பெய்தால் 5 ஓவர்கள் ஆட்டமாக குறைக்கப்படும் என்றும் ஐந்து ஓவரும் நடத்த முடியாவிட்டாலும் ஒரே ஒரு சூப்பர் ஓவர் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?