Connect with us

இந்தியா

ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: மணீஷ் சிசோடியா கைதுக்கு பினராயி விஜயன் கண்டனம்!

Published

on

டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியாவை டெல்லி மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக கூறி சிபிஐ நேற்று 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் அதிரடியாக கைது செய்தது. இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் சிபிஐ விசாரணைக்கு அழைத்த நிலையில், விசாரணைக்கு அலுவலகத்துக்கு செல்லும் முன்னரே தான் இன்று கைது செய்யப்படலாம் என கூறிவிட்டு தான் சென்றார் மணீஷ் சிசோடியா. இவரது இந்த கைது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.

மணீஷ் சிசோடியா கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர், பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி, பெங்களூருவில் உள்ள பாஜக அலுவலகத்தையும் ஆம் ஆத்மி கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மணீஷ் சிசோடியா கைதுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்திருப்பது, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக, மத்திய அரசின் அமைப்புகளை பாஜக எப்படி தவறாகப் பயன்படுத்துகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பாஜகவின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என பதிவிட்டுள்ளார். முன்னதாக பாஜக செய்தி தொடர்பாளர் அடுத்ததாக அரவிந்த் கேஜ்ரிவாலும் கைது செய்யப்படுவார் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?