Connect with us

இந்தியா

கடைசி காலத்தில் அம்மாவை கவனிக்க முடியாத மகன்.. மன வருத்தத்தில் எடுத்த முடிவுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

Published

on

By

கடைசி காலத்தில் அம்மாவை கவனிக்க முடியாத மகன் எடுத்த அதிரடி முடிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மும்பையை சேர்ந்த தன்ராஜ் என்பவர் 25 ஆண்டுகளாக தனது அம்மாவை தன்னுடன் வைத்து கவனித்துக் கொண்டார். அவரது மனைவி விஜயாவும் தனது மாமியாருக்கு தொண்டு சேவை புரிந்து வந்தார். ஆனால் தன்ராஜின் தாயாரின் கடைசி காலத்தில் தனது கிராமத்தில் இருக்க விரும்பி சென்று விட்டார். இந்த நிலையில் ஒரு சில வருடங்கள் கிராமத்தில் இருந்த தன்ராஜின் தாயார் உடல் காரணமாக அங்கேயே காலமானார்.

தனது தாயாரின் சொந்த கிராமத்தில் அவரை கவனிக்க யாரும் இல்லாததுதான் அவர் இறந்ததற்கு காரணம் என்ற மனக்குறையுடன் தன்ராஜ் ஒரு சில ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். இதனை அடுத்து அவர் அதிரடி முடிவெடுத்து தனது தாயாரை கடைசி காலத்தில் கவனிக்க முடியாமல் செய்த தவறுக்கு பிராயசித்தமாக ஒரு முதியோர் இல்லத்தை தொடங்க முடிவு செய்தார்.

ஓய்வு பெற்றவுடன் அவருக்கு வந்த பணம் முழுவதையும் முதியோர் இல்லம் கட்டுவதற்காக திட்டமிட்டார். முதலில் ஒரு சொந்த இடம் வாங்கி அதில் ஒரு கட்டிடத்தை கட்டி முதியோர் இல்லமாக மாற்றினார். அந்த முதியோர் இல்லத்தில் வரும் 8 பேருக்கு ஒரு பணியாளர் 24 மணி நேரம் நர்சுகள் பராமரிப்பு மற்றும் அந்த முதியோர்களின் குழந்தைகளுக்கு கல்வி செலவுக்காக மாதம் பத்தாயிரம் ரூபாய் என பல்வேறு உதவிகளை செய்தார்.

பார்வதி பாபாஜி ஹசாரே என்ற அறக்கட்டளை மூலம் அவர் இந்த தொண்டுகளை சில ஆண்டுகளாக செய்து வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட முதியோர் இல்லம் தற்போது மிகப்பெரிய அளவில் ஏராளமான முதியோர்களை காக்கும் ஒரு இல்லமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தன்ராஜின் மனைவி விஜயா கூறிய போது எங்கள் மாமியார் எங்களுடன் 25 ஆண்டுகள் இருக்கும்போது நன்றாக இருந்தார். ஆனால் ஒரு சில ஆண்டுகள் அவர் தனியாக கிராமத்தில் இருந்தபோது அவரை கவனிக்க யாரும் இல்லாததால் அவர் காலமானார். இது எனது கணவருக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. இதனால் தான் எங்கள் மாமியாரின் வயதில் உள்ள முதியோர்களை பாதுகாக்க நாங்கள் முடிவு செய்தோம். முதியோர்களுக்கு செய்யும் சேவை நம் பெற்றோருக்கு செய்யும் சேவை போலாகும் என்று எங்கள் மனம் உணர்கிறது என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தன்ராஜ் மற்றும் விஜயா தம்பதிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

சினிமா8 hours ago

சிக்கலில் தனுஷ் படம்: விளக்கம் கொடுத்த இயக்குநர்!

வேலைவாய்ப்பு8 hours ago

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 9223

இந்தியா9 hours ago

எஸ்பிஐ-எச்.டி.எப்.சி வங்கிகள் நிறுத்த போகும் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம்.. இன்றே முந்துங்கள்..!

இந்தியா9 hours ago

ஐடிபிஐ வங்கியின் புதிய CFO ஸ்மிதா ஹரிஷ் குபேர்: யார் இவர் தெரியுமா?

சினிமா செய்திகள்9 hours ago

நயன்தாராவால் நடந்த மாற்றம்: கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி!

இந்தியா9 hours ago

ஒட்டுமொத்த இஞ்ஜினியரிங் டீம் காலி.. வேலைநீக்கம் செய்த பிரபல நிறுவனம்..!

சினிமா செய்திகள்11 hours ago

போலா படத்தில் அஜய் தேவ்கன் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

சினிமா செய்திகள்11 hours ago

இளையராஜா இசையில் பாட மறுத்தத வானி ஸ்ரீ.. யார் இவர்?

தமிழ்நாடு11 hours ago

மாறி மாறி வாழ்த்து வருதே.. புரியலையே.. எடப்பாடி வென்றதும் அடுத்தடுத்து வந்த திருமா + ராமதாஸ்

தமிழ்நாடு11 hours ago

ஆரம்பமே சிங்கப்பாதை.. பொதுச்செயலாளர் ஆன உடனேயே எடப்பாடி போட்ட பரபர ஆர்டர்!

வேலைவாய்ப்பு6 days ago

தமிழக அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.56,100/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2800+

பர்சனல் பைனான்ஸ்7 days ago

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து அதிக டிவிடண்ட் வழங்கும் இந்திய நிறுவனங்கள்!

வேலைவாய்ப்பு5 days ago

NIT திருச்சியில் வேலைவாய்ப்பு!

உலகம்7 days ago

திவால் நிலைக்கு சென்ற கிரெடிட் சூயிஸ் ஊழியர்களுக்கு வித்தியாசமான அபராதம் விதித்த சுவிஸ் அரசாங்கம்!

வணிகம்7 days ago

தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாகச் சவரனுக்கு ரூ.800 சரிந்தது (22/03/2023)!

வேலைவாய்ப்பு5 days ago

IIITDM காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.85,000/- ஊதியத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 days ago

ரூ.1,77,500/- ஊதியத்தில் NIC-ல் வேலைவாய்ப்பு!மொத்த காலியிடங்கள் 590+