Connect with us

இந்தியா

கடைசி காலத்தில் அம்மாவை கவனிக்க முடியாத மகன்.. மன வருத்தத்தில் எடுத்த முடிவுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

Published

on

கடைசி காலத்தில் அம்மாவை கவனிக்க முடியாத மகன் எடுத்த அதிரடி முடிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மும்பையை சேர்ந்த தன்ராஜ் என்பவர் 25 ஆண்டுகளாக தனது அம்மாவை தன்னுடன் வைத்து கவனித்துக் கொண்டார். அவரது மனைவி விஜயாவும் தனது மாமியாருக்கு தொண்டு சேவை புரிந்து வந்தார். ஆனால் தன்ராஜின் தாயாரின் கடைசி காலத்தில் தனது கிராமத்தில் இருக்க விரும்பி சென்று விட்டார். இந்த நிலையில் ஒரு சில வருடங்கள் கிராமத்தில் இருந்த தன்ராஜின் தாயார் உடல் காரணமாக அங்கேயே காலமானார்.

தனது தாயாரின் சொந்த கிராமத்தில் அவரை கவனிக்க யாரும் இல்லாததுதான் அவர் இறந்ததற்கு காரணம் என்ற மனக்குறையுடன் தன்ராஜ் ஒரு சில ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். இதனை அடுத்து அவர் அதிரடி முடிவெடுத்து தனது தாயாரை கடைசி காலத்தில் கவனிக்க முடியாமல் செய்த தவறுக்கு பிராயசித்தமாக ஒரு முதியோர் இல்லத்தை தொடங்க முடிவு செய்தார்.

ஓய்வு பெற்றவுடன் அவருக்கு வந்த பணம் முழுவதையும் முதியோர் இல்லம் கட்டுவதற்காக திட்டமிட்டார். முதலில் ஒரு சொந்த இடம் வாங்கி அதில் ஒரு கட்டிடத்தை கட்டி முதியோர் இல்லமாக மாற்றினார். அந்த முதியோர் இல்லத்தில் வரும் 8 பேருக்கு ஒரு பணியாளர் 24 மணி நேரம் நர்சுகள் பராமரிப்பு மற்றும் அந்த முதியோர்களின் குழந்தைகளுக்கு கல்வி செலவுக்காக மாதம் பத்தாயிரம் ரூபாய் என பல்வேறு உதவிகளை செய்தார்.

பார்வதி பாபாஜி ஹசாரே என்ற அறக்கட்டளை மூலம் அவர் இந்த தொண்டுகளை சில ஆண்டுகளாக செய்து வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட முதியோர் இல்லம் தற்போது மிகப்பெரிய அளவில் ஏராளமான முதியோர்களை காக்கும் ஒரு இல்லமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தன்ராஜின் மனைவி விஜயா கூறிய போது எங்கள் மாமியார் எங்களுடன் 25 ஆண்டுகள் இருக்கும்போது நன்றாக இருந்தார். ஆனால் ஒரு சில ஆண்டுகள் அவர் தனியாக கிராமத்தில் இருந்தபோது அவரை கவனிக்க யாரும் இல்லாததால் அவர் காலமானார். இது எனது கணவருக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. இதனால் தான் எங்கள் மாமியாரின் வயதில் உள்ள முதியோர்களை பாதுகாக்க நாங்கள் முடிவு செய்தோம். முதியோர்களுக்கு செய்யும் சேவை நம் பெற்றோருக்கு செய்யும் சேவை போலாகும் என்று எங்கள் மனம் உணர்கிறது என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தன்ராஜ் மற்றும் விஜயா தம்பதிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

author avatar
seithichurul
இந்தியா7 நிமிடங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்17 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்20 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா20 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்20 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!