சினிமா செய்திகள்
எலிமினேட் ஆன முதல் ஃபைனலிஸ்ட்: 5வது இடம் பிடித்தவர் யார் தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நாளை ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இன்று ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்பதும் நாளை இறுதி நிகழ்ச்சிக்கு நான்கு போட்டியாளர்கள் மட்டுமே செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் இன்று வெளியேற்றப்பட்ட போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிக்கு ராஜு, பிரியங்கா, அமீர், பாவனி மற்றும் நிரூப் ஆகிய ஐந்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று குறைந்த வாக்குகளின் அடிப்படையில் நிரூப் எலிமினேட் செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இந்த நிகழ்ச்சியில் நிரூப்புக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. நிரூப் எலிமினேட் செய்யப்பட்டது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை நடைபெறவிருக்கும் இறுதிப்போட்டியில் ராஜு, பிரியங்கா, அமீர், பாவனி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் என்பதும் அவர்களில் ஒருவர் பிக் பாஸ் டைட்டில் பட்டம் மற்றும் ரூபாய் 50 லட்சம் ரூபாய் பரிசை தட்டிச் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னரே ராஜூ தான் டைட்டில் வின்னர் என்பது கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது என்பதும் அவருக்கு பதிவாகிக் கொண்டு இருக்கும் ஓட்டுகளை பார்க்கும்போது கண்டிப்பாக ராஜூ டைட்டில் பட்டத்தை வென்று விடுவார் என்றும் பிக்பாஸ் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/MSimath/status/1482284010743214084