ஆட்டோமொபைல்
கார் உரிமையாளரா நீங்கள்… பிப்ரவரி 1ம் தேதி முதல் புதிய விதி அமலாகிறது…

இந்திய கார் உரிமையாளர்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கக்கூடிய வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி கார்களுக்கான Know Your Vehicle (KVY) நடைமுறையை நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறை பிப்ரவர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
KVY என்பது FASTags வாகன பதிவு எண்களுடன் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்திட ஏற்படுத்தப்பட்ட ஒரு துல்லிய சரிபார்ப்பு வழிமுறை. இது ஏன் கொண்டு வரப்பட்டதென்றால் சில லாரி ஓட்டுநர்கள் அவர்களுக்கான ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி சுங்கச்சாவடிகளில் குறைவான கட்டணத்தைச் செலுத்தி வந்துள்ளனர். இது போன்ற அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தும் தவறுகளைக் கண்டுபிடித்து சமாளிக்க நாடு தழுவிய அளவில் ஒரு பாதுகாப்பு நடைமுறையை உருவாக்கி பயன்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டதனால் இந்த KVY நடைமுறை அரசால் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வந்தது.
இது தொடர்பாக தவறு செய்பவர்களை ஒடுக்குவதற்கு பதிலாக அணைத்து கார் உரிமையாளர்களுக்கும் இந்த கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது இயற்கை நீதிக்கு எதிரானது என்று குறிப்பிடப்பட்டு கோரிக்கைகள் வரப்பெற்றன. அரசு அவற்றை கவனமுடன் பரிசீலித்த பிறகு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் கலந்தாலோசித்த பிறகு இப்போது முடிவெடுக்கப்பட்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் புதிய FASTags பெற KVY சரிபார்ப்பு செய்யத் தேவையில்லை என்று அறிவித்துள்ளது. இந்த விதிமுறை கார்கள் ஜீப்கள் மற்றும் வேன்களுக்கு வழங்கப்படும் புதிய FASTag க்கு மட்டுமே பொருந்தும் என்று அறிவித்துள்ளது.












