Connect with us

இந்தியா

பாத்ரூமில் ஒன்றாக குளித்து கொண்டிருந்த தம்பதி மர்ம மரணம்.. அதிர்ச்சி காரணம்..!

Published

on

ஹோலி பண்டிகை கொண்டாடிட்டு வீட்டில் உள்ள பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்த தம்பதிகள் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

மும்பையில் உள்ள அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்றில் வசிக்கும் தீபக் மற்றும் ஷில்பி ஆகிய இருவரும் நேற்று முன்தினம் ஹோலி பண்டிகை கொண்டாடினார் என்பதும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக ஹோலி பண்டிகை கொண்டாடிய பின் வீட்டிற்கு வந்து பாத்ரூமில் குளிக்க சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.காலையில் வீட்டு வேலைக்காரர் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால் அவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து பக்கத்து வீட்டு நபர் தீபத்தின் தாயாரை தொடர்பு கொண்டு தகவல் கூறியவுடன், அவருடைய உறவினர்கள் அவசரமாக வீட்டிற்கு வந்தனர்.

தங்களிடம் உள்ள மாற்றுச் சாவியை வைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் பாத்ரூமில் மயங்கிய நிலையில் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் இருவரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து இறந்த தம்பதிகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். இது குறித்த முதல் கட்ட விசாரணையில் பாத்ரூமில் கெய்சர் வாயு கசிவு ஏற்பட்டதால் இருவரும் மயங்கி விழுந்து நீண்ட நேரம் கவனிக்கப்படாததால் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பாத்ரூமில் உள்ள தண்ணீரை சூடு செய்வதற்காக உபயோகப்படும் கெய்சர் வாயு கசிய ஆரம்பித்தால் அது ஆக்சிஜனை உட்கொண்டு விடும் என்றும் அதனால் ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தினால் மனிதர்கள் மயக்கம் அடையும் நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக காற்றோட்டம் இல்லாத குளியல் அறையில் முழுக்க முழுக்க ஆக்சிஜன் இல்லாமல் கார்பன் மோனாக்சைடு சுவாசிக்க நேரிடும் போது மனிதர்கள் தங்களது சுயநினைவு இழப்பார்கள் என்றும் மூளை பாதிப்பு மற்றும் வலிப்பு உள்ளிட்ட நோய்க்கு ஆளாகலாம் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தம்பதியினரின் மரணத்திற்கு காரணம் தெரியவரும் என்று காவல்துறை என தெரிவித்துள்ளனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?