Connect with us

உலகம்

லாக்கரில் வைத்த லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளை விற்ற வங்கி நிர்வாகம்.. என்ன நடந்தது?

Published

on

லாக்கரில் வைத்திருந்த லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளை ஜேபி மோர்கன் வங்கி விற்று விட்டதாக தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் முன்னணி வங்கிகளில் ஒன்று ஜேபி மோர்கன் வங்கி என்பதும் இந்த வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு லாக்கர் வசதியை செய்து கொடுத்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் ஜேபி மோர்கன் வங்கியில் தங்களது லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகள் அரிய வகை நாணயங்கள் உள்ளிட்ட பொருட்களை இந்த வங்கியின் லாக்கரில் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் ஜேபி மோர்கன் வங்கி தங்களுக்கு லாக்கர் பெட்டிகளுக்கான பில்களை தவறான முகவரிக்கு அனுப்பியதாகவும் அந்த பில்கள் தங்களுக்கு கிடைக்காததால் ஜேபி மோர்கன் வங்கி நிர்வாகம் தங்களது லாக்காரில் இருந்த நகைகளை விற்று விட்டதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

#image_title

இந்த தம்பதியினருக்கு மான்ஹாட்டன் என்ற பகுதியில் ஒரு குடியிருப்பும், லூசியானா என்ற பகுதியில் ஒரு குடியிருப்பும் சொந்தமாக உள்ளது. மன்ஹோட்டன் குடியிருப்பில் இந்த தம்பதி தங்கி இருக்கும் நிலையில் வங்கி நிர்வாகம் லூசியானா முகவரிக்கு பில்களை அனுப்பி உள்ளது. இந்த நிலையில் வங்கியில் இருந்து எந்த விதமான பில்களும் கிடைக்காததால் இந்த தம்பதியினர் லாக்கருக்கான பில் செலுத்தவில்லை என்றும் இதனை அடுத்து எச்சரிக்கை கடிதமாக பில்களை கட்டாவிட்டால் வங்கி லாக்கரில் உள்ள பொருள் அகற்றப்படும் என்று அனுப்பி வைத்தாகவும் தெரிகிறது. ஆனால் இந்த எச்சரிக்கை கடிதமும் தவறான முகவரிக்கு அனுப்பப்பட்டதாக தம்பதிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு மேல் லாக்கர் பணம் கட்டாததை அடுத்து ஜேபி மோர்கன் வங்கி நிர்வாகம், தம்பதியினரின் லாக்கரை உடைத்து அதில் உள்ள நகைகள் விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் அரிய நாணயங்களை விற்பனை செய்து விட்டதாக தெரிகிறது.

மிகவும் தாமதமாக இதனை தெரிந்து கொண்ட தம்பதியினர் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், தங்களுக்கு அனுப்ப வேண்டிய பில்களை தவறான முகவரிக்கு அனுப்பிவிட்டு தற்போது தங்களது லட்சக்கணக்கான மதிப்புள்ள நகைகளை விற்பனை செய்துள்ளனர் என்று வழக்கு தொடர்ந்து உள்னர். ஆனால் வங்கி நிர்வாகம் தம்பதியினர் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.

வணிகம்17 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?