Connect with us

தமிழ்நாடு

பச்சிளம் குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற கல்நெஞ்ச தாய்!

Published

on

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்த 23 வயதான ஜெலஸ்டினா என்பவர் பிறந்து 18 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஜெலஸ்டினா-சத்தியராஜ் தம்பதியினருக்கு சில தினங்களுக்கு முன்னர் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே நிஷாந்தி என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தை கடந்த 12-ஆம் தேதி பாலூட்டும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்தார்.

ஆனால் பிரேத பரிசோதனையில் குழந்தையின் பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தது தெரியவந்ததையடுத்து குழந்தையின் தாய் ஜெலஸ்டினாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், எனது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து அவர்களுக்கு 3 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. ஆனால் அதனை மறைத்து இரண்டாவதாக என்ன திருமணம் செய்துகொண்டார்.

இதனால் நான் வெறுப்பில் இருந்தேன். மேலும் ஏற்கனவே ஒரு பெண் குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டு வரும் நான் இந்த குழந்தையையும் வளர்க்க முடியாமல் கஷ்டப்படுவதை விட அந்த குழந்தையை கொன்றுவிடலாம் என முடிவு செய்தேன். இதனையடுத்து குழந்தையின் காலை பிடித்து மண்டையை தரையில் ஓங்கி அடித்தேன் இதனால் குழந்தை அலறி துடித்து சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. பின்னர் குழந்தை பால் குடிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக நாடகமாடினேன் என தெரிவித்தார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?