செய்திகள்
தமிழகத்தில் தொடர்ந்து கொலை செய்யப்படும் காவல் அதிகாரிகள்! திருப்பூரில் நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

திருப்பூரில் விசாரணைக்கு சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் இரண்டு காவல் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, குடிமங்கலம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளாராக சண்முக சுந்தரம் என்பவர் பணிபுரிந்து வருகிறார்..
இந்நிலையில் அக்காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிக்கனூத்து பகுதியில், அதிமுக எம்.. எல். ஏ மகேந்திரனுக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு மகன்கள் தங்கி தோட்ட பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த செவ்வாய் கிழமை தந்தை மற்று மகன்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை கண்டிப்பதற்காக அங்கு வந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முக சுந்தரத்திற்கும், அங்கு பணிபுரியும் தந்தையின் மகன்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் ஆத்திரம் அடைந்த மகன்கள் சண்முகத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் காவல்துறையினர்களுக்கு கூட பாதுகாப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது.














