இந்தியா
திருமணம் ஆன ஐந்தே மாதத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்: உ.பியில் நேர்ந்த கோர சம்பவம்

உத்தர பிரதேச மாநிலத்தில் திருமணம் ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவத்தை தொடர்ந்து, காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அது தற்கொலை அல்ல கொலை என தெரிய வந்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த மது சிங் (வயது 32) என்ற பெண்ணுக்கும், அதே மாநிலத்தை சேர்ந்த அனுராக் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. அனுராக் ஒரு தனியார் கடற்படை துறையில் தலைமை பொறுப்பில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் திருமணத்திற்கு பின்பு அனுராக் சிங். மதுவின் குடும்பத்தினரிடம் 15 லட்சம் வரதட்சணையாக கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண்ணின் பெற்றோரால் 5 லட்சம் மட்டுமே தர தற்போது தர முடியும் என கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அனுராக், தனது மனைவியை
பணம் கேட்டு கொடுமை செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மது தன் கணவரிடம் சண்டை போட்டுவிட்டு தனது பெற்றோரது வீட்டுக்கு வந்துவிட்டார்.
மேலும் இது நடந்த சில மாதங்களில் அனுராக் சிங்கிற்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அதனை மறைத்த காரணத்தால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக மதுவின் தந்தை காவல் துறையிடம் புகாரும் அளித்துள்ளார்.
இதனிடையே மது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அனுராக் சிங்கை கைது செய்து குறுக்கு விசாரணை நடத்துகையில்
அனுராக் தான் வற்புறுத்தி மதுவை தூக்கிலிட வைத்திருக்கும் உண்மை தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து அவருக்கு வரதட்சணை கொடுமை தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.


















