சினிமா செய்திகள்
’பொன்னியின் செல்வன் 2’ அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவிக்கும் லைகா!
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்த ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது என்பதும் தெரிந்ததே.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை வாரி குவித்தது என்றும் இந்த படம் தமிழில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் மாபெரும் வெற்றி காரணமாக இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு ஆச்சரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘பொன்னியின் செல்வன் 2’ படம் குறித்த அறிவிப்பு நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளது. எனவே நாளை மாலை 4 மணிக்கு இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட இருப்பதாக கோலிவுட் திரையுலக பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த படத்தின் இரண்டு பாகங்களும் சேர்த்து மொத்த பட்ஜெட் 500 கோடி ரூபாய் என்ற நிலையில் முதல் பாகம் மட்டுமே 550 கோடி வசூலித்ததாக கூறப்படும் நிலையில் இரண்டாம் பாகமும் அதைவிட அதிகமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ’பொன்னியின் செல்வன்’ ரசிகர்களுக்கு நாளை மாலை ஒரு ஆச்சரிய அறிவிப்பு வெளியாக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.