Connect with us

தமிழ்நாடு

இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு.. மீண்டும் தொடர்மழை பெய்ய வாய்ப்பு!

Published

on

rain

வங்க கடலில் டிசம்பர் 5-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் அது ஒரு சில நாட்களில் காற்றழுத்த மண்டலமாக மாறி புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் மீண்டும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

rain கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக சீர்காழியில் வரலாறு காணாத மழை பெய்தது என்பதும் சென்னை உள்பட பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் மீண்டும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அடுத்த 48 மணி நேரங்களில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

டிசம்பர் 8ஆம் தேதி தமிழகத்தின் வட மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

rainகேரள மாநிலத்தில் தோன்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rainநாளை மற்றும் நாளை மறுதினம் தமிழக கடற்கரை மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் வரும் 8ஆம் தேதி இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்பதால் ஓரிரு இடங்களில் ஆரஞ்சு அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வரை 70 கிலோ மீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்பதால் இந்த பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?