இந்தியா
அடுத்த கட்சிக்குத் தாவும் குஷ்பு.. ஒரே வாரத்தில் குஷ்பு நிலைப்பாடு மாறியது எப்படி?

நடிகை குஷ்பு இன்று பாஜகவில் இணைய உள்ளதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதை உறுதி செய்யும் படியாக குஷ்பு காங்கிரஸ் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே குஷ்பு பாஜவில் இணைய உள்ளார் என்ற செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. அதை மறுத்த நடிகை குஷ்பு தனக்கு பாஜகவில் இணையும் எண்ணம் ஏதும் இல்லை என்று கூறியது மட்டுமல்லாமல் கடுமையாக விமர்சித்தும் வந்தார்.
உத்திர பிரதேசத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது காவல் துறையினர் தாக்கியது குறித்தும், பேரிடர் காலங்களில் மோடி விமானத்தில் பறந்து சென்று பார்வையிட்டுவிட்டு சென்று விடுவார். அதை படம்பிடிக்க ஒரு புகைப்பட கலைஞரையும் கூடவே அழைத்து செல்வார். ஆனால் ராகுல் காந்தி அப்படி இல்லை. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறும் அளவுக்கு எளிமையானவர்.
இப்படியெல்லாம் குஷ்பு கடந்த வாரம் வரை பேசி வந்த நிலையில், எப்படி திடீரென பாஜவில் இணைய உள்ளார் என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை உறுதி செய்யும் வண்ணமாகக் காங்கிரஸ் கட்சியில் அதிகாரம் செலுத்தும் சிலர், அடிமட்டத்தில் தொடர்ந்து கட்சிக்காகப் பாடு படும் எங்களைப் போன்றவர்களை கண்டுகொள்வதில்லை. அது மிகுந்த வருத்தமளிக்கிறது. காங்கிரஸ் கட்சியிலிருந்து தான் விலகினாலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது தனக்குள்ள மரியாதை ஒரு போதும் குறையாது என்று சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
முதன் முதலில் திமுகாவில் தன்னை இணைத்துக்கொண்ட குஷ்பு, பின்னர் காங்கிரஸில் சேர்ந்தார். இப்போது அடுத்த கட்சியாக பாஜகவுக்கு தாவ முயற்சித்து வருகிறார் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இன்று பாஜகவில் தமிழகத்தை சேர்ந்த 3 பிரபலங்கள் இணைய உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பிற்பகல் 1 மணியளவில் குஷ்பு பாஜகவில் இணைய உள்ளார். அதன் பின் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்து பெறுவார் என்றும் கூறப்படுகிறது.






















