தமிழ்நாடு
வைரமுத்து மீது மரியாதை இருக்கிறது, ஆனால் சின்மயி நீக்கப்பட்டது தவறு!
பிரபல பாடகி சின்மயியை டப்பிங் சங்கத்தில் இருந்து அதன் தலைவர் ராதாரவி அதிரடியாக நீக்கினார். இது சில சலசலப்பை ஏற்படுத்தியது. சின்மயி இது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்தார். இந்நிலையில் நடிகை கஸ்தூரியும் சின்மயி நீக்கப்பட்டது தவறு என தற்போது கூறியுள்ளார்.
பிரபல பாடக சின்மயி பிரபல கவிஞர் வைரமுத்து மீது மீடூ மூலம் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் சின்மயிக்கு ஆதரவாகவும், வைரமுத்துவுக்கு ஆதரவாகவும் பலரும் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த பிரச்சனையால் சமூக வலைதளங்கள் முழுவதும் இதையே விவாத்திக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் வைரமுத்துவுக்கு ஆதரவாக இருந்த நடிகர் ராதாரவி சின்மயியை டப்பிங் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கி அதிர்ச்சியளித்தார். இதனையடுத்து இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, டப்பிங் சங்கத்தில் இருந்து பாடகி சின்மயியை நீக்கியது தவறு.
அப்படியானால் வைரமுத்து குற்றவாளி என அவர்களே வாக்குமூலம் தருகிறார்களா? சின்மயியை நீக்கியது முட்டாள் தனம். வைரமுத்து மீது மதிப்பும் மரியாதையும் நான் வைத்து உள்ளேன். கஜா பாதித்த பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்கிறேன் என்றதும் முதலில் எனக்குப் பாராட்டும் உதவியும் செய்தவர் வைரமுத்து தான் என்றார் கஸ்தூரி.