Connect with us

சினிமா செய்திகள்

‘கடினமான சமயங்களில் சமந்தா கொடுத்த ஆதரவு’- பாடகி சின்மயி!

Published

on

பல கடினமான சமயங்களிலும் வேலையிலும் ஆதரவாக சமந்தா தனக்கு பக்கபலமாக இருந்ததை சின்மயி தெரிவித்துள்ளார்.

’கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. பல கதாநாயகிகளுக்குப் பின்னணி குரலும் கொடுத்து வருகிறது. தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் பாடல் பாடி வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்னால் ‘மீ டூ’ இயக்கத்தில் பாலியல் தொந்தரவு தொடர்பாக பாடலாசிரியர் வைரமுத்து மீது புகார் கொடுத்தார்.

இதனால், சின்மயிக்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்பு வந்தது. தமிழ் சினிமாவில் பின்னணிக் குரல் கொடுக்க அவருக்குத் தடையும் அளிக்கப்பட்டது. இதுபோன்ற கடினமான சமயங்களில் நடிகை சமந்தா தனக்கு தனிப்பட்ட முறையிலும் வேலையிலும் பக்கபலமாக இருந்ததை சின்மயி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டியில் அவர் பகிர்ந்திருப்பதாவது, ’நம் நாட்டில் சினிமாத் துறையைப் பொருத்த வரையிலும் பல காலமாக நடிகைகள் எதிர்கொண்டு வந்த பல தடைகளை கடந்து புதுவிதிகளை உருவாக்கிக் கொண்டிருப்பவர் சமந்தா. ’மீ டூ’ இயக்கத்தில் என்னுடன் துணை நின்றார்.

samantha

மற்றவர்கள் என் மீது நம்பிக்கை இல்லாமல் விலகியபோது கூட என் மீது நம்பிக்கை வைத்து எனக்காகவும் என் வேலைக்காகவும் பக்கபலமாக இருந்தார், இருக்கிறார்’ எனத் தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தாவும் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில், ’சின்மயியையும் அவருடய கணவர் ராகுலையும் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் தெரியும். பல கடினமான சமயத்தில் எனக்கு உடன் நின்றனர். உண்மையான நட்பு என்றால் அதற்கு இவர்கள்தான் உதாரணம்’ நெகிழ்ந்துள்ளார் சமந்தா.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?