சினிமா செய்திகள்
வானதியிடம் தோற்ற மொத்த காண்டையும் கமல் காட்டிவிட்டார்: ‘பத்தல பத்தல’ பாடல் குறித்து கஸ்தூரி
கோவை தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசனிடம் தோல்வியடைந்த மொத்த காண்டையும் இந்த ஒரே ஒரு பாடலில் காட்டி விட்டார் என கமல்ஹாசனின் ’பத்தல பத்தல’ பாடலை நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார்
கமல்ஹாசன் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகி பத்தல பத்தல என்ற பாடல் நேற்று வெளியானது. இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வைரலான நிலையில் இந்த பாடலில் மத்திய அரசை மறைமுகமாக விமர்சனம் செய்யும் ஒரு சில வரிகளை கமல்ஹாசன் எழுதியிருந்தார்
இந்த வரிகள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல் வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல இறக்கிட்டாப்ல. ஒன்றியம் ங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு! என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.