தமிழ்நாடு
போலி கூட்டு பாலியல் வன்கொடுமை: வெளிச்சத்துக்கு வந்த உண்மை!
காஞ்சிபுரத்தில் சில தினங்களுக்கு முன் பிரியா(பெயர் மாற்றம்) என்ற பெண் ஒரு பரப்பு புகாரை காவல் நிலையத்தில் அளித்தார். தன்னை சுரேஷ்(பெயர் மாற்றம்) என்பவர் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இந்நிலையில் இந்த வழக்கில் காவல்துறை விசாரணையில் திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே பெண் ஒருவர் தன்னை 4 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். இதனை போலிசார் விசாரித்தபோது அப்பெண் பல தகவல்களை முன்னுக்குப்பின் முரணாக கூறியிள்ளார். இதனையடுத்து போலீசாரின் சந்தேகம் புகார் அளித்த பெண்ணின் மீதே திரும்பியது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தியதில், கருத்து வேறுபாட்டால் தனது ஆண் நண்பரை சிக்கவைக்க அந்த பெண் இந்த பாலியல் வன்கொடுமை நாடகத்தை நடத்திய உண்மை வெளிவந்துள்ளது.
பெண் ஒருவர் போலியாக கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் அளித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கில் புகார் அளித்தவரே குற்றவாளியாக மட்டிக்கொண்டு இருப்பது திடீர் திருப்பமாக அமைந்துள்ளது. பாலியல் வன்கொடுமை சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பை அளிக்க பயன்படுத்தப்படுத்தப்பட வேண்டும். ஆனால் பெண்கள் இதனை தவறாக ஆண்களை பழிவாங்க போலி வழக்குகளை தொடுக்க பயன்படுத்துவது கவலையளிக்கிறது.