செய்திகள்
2 வருடங்களாக பாலியல் வன்கொடுமை… 14 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை…..
பெற்ற தந்தையே மகளை வருடக்கணக்கில் பாலியல் வன்கொடுமை செய்து வரும் சம்பவம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இது போன்ற சம்பவங்கள் செய்திகளாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
சென்னை செம்மஞ்சேரி சரகம் பகுதியில் வசிப்பவர் வர்கீஸ்(54). இவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 1ம் தேதி சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. எனவே, வர்கீஸ் மகளை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருந்ததை கண்டு அதிர்சி அடைந்தனர். மேலும், செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் கிண்டியில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தெரிவித்தனர். மகளிர் போலீசார் சிறுமியிடன் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சிறுமியின் தந்தை வர்கீஸ் கடந்த 2 வருடங்களாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகவும், அதனால் தான் கர்ப்பம் அடைந்ததாகவும் சிறுமி கூறியதை கேட்டு அவர்கள் அதிர்ந்து போனார்கள். இதையடுத்து, சிறுமியின் தந்தை வர்கீஸை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.