Connect with us

வணிகம்

இனி அரசியல் வெறுப்பு பேச்சுக்களுக்கு இடமில்லை.. சாட்டையை சுழற்றிய பேஸ்புக்.. எங்கெல்லாம் கட்டுப்பாடு தெரியுமா?

Published

on

உலகின் மிகப்பெரிய சோஷியல் மீடியா நிறுவனமான பேஸ்புக் குறிப்பிட்ட சில நாடுகளில் அரசியல் தொடர்பான பதிவுகளை பயனாளர்களின் டைம்லைனில் இருந்து குறைக்க போவதாக அறிவித்துள்ளது.

இப்பொது இருக்கும் சமூக ஊடகங்களில் முதன்மையானது பேஸ்புக். உலகம் முழுவதிலும் இருந்து பல பில்லியன் பயனாளர்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் தொடங்கி அரசுக்கு எதிரான போராட்டங்கள் வரை பல்வேறு நிகழ்வுகள் பேஸ்புக் மூலம் ஒருங்கிணைக்கப்படுகிறது.

சமீபத்தில் மியான்மரில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்புக்கு எதிரான மக்கள் போராட்டங்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அதேநேரம் தேவையற்ற வன்முறைகளும், வெறுப்பு பேச்சுக்களும், சண்டைகளும் பேஸ்புக் மூலம் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.

மியான்மரில் நடைபெற்ற மதரீதியிலான வன்முறைகளும், இந்தியாவில் நடைபெற்ற சில கலவரங்களும் அதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த நிலையில் தான் இதுபோன்ற நிகழ்வுகளை காரணம் காட்டி, குறிப்பிட்ட சில நாடுகளில் அரசியல் ரீதியிலான பதிவுகளை பயனர்களின் டைம்லைனில் இருந்து குறைக்கும் முடிவை மேற்கொள்ள போவதாக பேஸ்புக் அறிவித்துள்ளது.

இந்த வாரத்தில் இருந்து கனடா, பிரேசில் மற்றும் இந்தோனேசியாவில் உள்ள பயனர்களுக்கான பேஸ்புக்கில் இருந்து அரசியல் உள்ளடக்கத்தை தற்காலிகமாகக் குறைக்கும். அதேபோல வரும் வாரங்களில் அமெரிக்காவிலும் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ள போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், கடந்த ஜனவரி மாதம் அரசியல் வெறுப்பு பேச்சுக்களின் தாக்கத்தை குறைக்க விரும்புவதாக கூறினார். ஏனெனில் மக்கள் எங்கள் தளத்தில் அரசியலை விரும்பவில்லை, மற்றும் அதனால் ஏற்படும் சண்டைகள் அவர்களின் அனுபவங்களை எடுத்துக்கொள்வதையும் விரும்பவில்லை என்றார்.

பேஸ்புக் சமூக வலைத்தளம் வெறுக்கத்தக்க பதிவுகளை சரியாக நீக்குவதில்லை என்கிற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் குடிமை மற்றும் அரசியல் குழுக்களை பயனர்களுக்கு பரிந்துரைப்பதை நிறுத்தப்போவதாக அறிவித்தது.

அடுத்த சில மாதங்களில், அரசியல் உள்ளடக்கத்திற்கான மக்களின் மாறுபட்ட விருப்பங்களை நன்கு புரிந்துகொள்வதற்கும், அந்த நுண்ணறிவுகளின் அடிப்படையில் பல அணுகுமுறைகளை சோதிப்பதற்கும் நாங்கள் பணியாற்றுவோம். முதல் கட்டமாக, இந்த வாரம் கனடா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா நாடுகளிலும் வாரங்களில் அமெரிக்காவிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு அவர்களுடைய டைம்லைனில் அரசியல் உள்ளடக்க தகவல்களை தற்காலிகமாக குறைப்போம் என்று கூறப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் குறித்த நம்பகமான தகவல்களை மக்களிடையே தக்கவைத்துக்கொள்வதற்காக உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையங்களுக்கு மட்டும் இந்த நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது..

இருப்பினும் பேஸ்புக்கின் இந்த முடிவு ஒரு பக்கம் சாதகமானதாக தெரிந்தாலும் மறுபக்கம் பாதகமான அம்சங்கள் இருப்பதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது மக்களை எதை பார்க்க வைக்க வேண்டும் என கட்டளையிடும் சர்வாதிகார நடவடிக்கை, சில நேரங்களில் அரசாங்கங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் நடைபெறும் சமயத்தில் இதுபோன்ற வாய்ப்பை அரசுகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.

வணிகம்14 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?