இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.03.2026

- ஹிந்து, சீக்கியர், புத்த மதத்திற்கே SC அந்தஸ்து பொருந்தும்: உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றம், பட்டியலிடப்பட்ட சாதி (SC) அந்தஸ்து குறித்து முக்கிய விளக்கத்தை வழங்கியுள்ளது. ஹிந்து, சீக்கியர், புத்த மதத்தை தவிர மற்ற மதங்களை பின்பற்றுபவர்கள், பட்டியலிடப்பட்ட சாதி அந்தஸ்துக்கு உட்பட முடியாது என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஒருவர் வேறு மதத்திற்கு மாறினால், அவரின் பட்டியலிடப்பட்ட சாதி அந்தஸ்து செல்லாது எனவும் கூறப்பட்டுள்ளது.
- ரயில் புறப்படுவதற்கு முன் 72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்குள் ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் ரத்து கட்டணம் தவிர பயணக் கட்டணத்திலும் 25% பிடிக்கப்படும். ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை ரயிலில் ஏறும் இடத்தை பயணிகள் மாற்றிக் கொள்ள அனுமதி. – ஏப்ரல் 1 முதல் புதிய மாற்றங்கள் அமலாகின்றன.
- 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க அல்லது திருத்தங்கள் செய்ய மார்ச் 26 கடைசி நாளாக அறிவிப்பு.
- 2011 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து மக்களவை தொகுதிகளை அதிகரிக்க ஒன்றிய அரசு தீவிரம். அதற்கான மசோதா இந்த வாரம் தாக்கல் செய்யப்படும். மறுவரையறைக்குப் பின் 816 தொகுதிகளாக உயரும்.
- அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு இலவசமாக ஃபிரிட்ஜ் வழங்கப்படும். அணைத்து குடும்ப அட்டைகளுக்கும் ஒரு கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும். ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம். வங்கிகளில் பெற்ற கல்விக்டன் தள்ளுபடி செய்யப்யடும். மகளிர் இருசக்கர வாகனம் வாங்க ரூ.25000 மானியம் வழங்கப்படும்.அரசு பள்ளி மாணவர்க்கான மருத்துவ இட ஒதுக்கீடு 7.5% லிருந்து 10 % ஆக உயர்த்தப்படும்.– தேர்தல் வாக்குறுதி.
- Royal Challengers Bengaluru அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்த 11 ரசிகர்களை நினைவுகூர எம்.சின்னசாமி ஸ்டேடியம் மைதானத்தில் 11 இருக்கைகள் காலியாக வைக்க முடிவு.
- மாடியில் இருந்து விழுந்து 13 ஆண்டுகள் கோமாவில் இருந்த காசியாபாத் 31 வயது இளைஞர் ஹரீஷ்ராணா வின் உயிர் பிரிந்தது.














