இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.03.2026

- சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க ரஷ்யா மற்றும் ஜப்பானிடமிருந்த எல்பிஜி கியாஸ் இறக்குமதி செய்ய ஒன்றிய அரசு முடிவு.
- கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி விடுதிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி வகுப்புகள் நாளை மறுநாள் முதல் ஆன்லைனில் நடைபெறும் என கோவை தனியார் பொறியியல் கல்லூரி தெரிவித்துள்ளது. கடைசி செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என்று கோவை தனியார் கல்லூரி அறிவித்துள்ளது.
- உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன ஐஎன்எஸ் தரகிரி போர்க்கப்பல் ஏப்ரல் 3ம் தேதி இந்திய கடற்படையில் இணைகிறது. ரேடார் கண்களில் சிக்காத தொழில்நுட்பம் கொண்டது.
- படையப்பா 2 முழு கதை ரெடி. சூப்பர் ஸ்டாரே எழுதியுள்ளார்.இயக்குநர் யார்? எப்போது படமாகும் ? என்பது முடிவு செய்யப்படவில்லை. – இயக்குநரும் ரஜினியின் மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் பேட்டி.
- போர்ச்சூழல் காரணமாக மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய வணிக சிலிண்டர்களின் அளவு 30% ஆக குறைக்கப்பட்ட நிலையில் மார்ச் 23 முதல் 50% ஆக உயர்த்துவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு! இதனை ஓட்டல்கள், அரசு சமையல் கூடங்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் எனவும் நிபந்தனை.













