இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

- நாடு முழுதும் மே 3ம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்விற்கு நாளை முதல் NEET.NTA.NIC.in என்ற அதிகாரப்புர்வ இணையதளத்தில் ஆல்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டிலிருந்து மட்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர்.
- சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை வழக்கில் போலீசார் 9 பேருக்கு கீழமை நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ தரப்பு முறையீடு. 9 குற்றவாளிகளும் சிறையிலிருந்து காணொளி மூலம் ஆஜராகினர். விசாரணையை வரும் 30ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
- உக்ரைன் உடனான போரில் ரஷ்யாவுக்காக போரிட்ட 10 இந்தியர்கள் உயிரிழந்த்தாக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவிப்பு. ரஷ்யாவில் சிக்கியுள்ள மேலும் 16 பேரில் ஒருவர் கிரிமினல் வழக்கில் சிறையில் உள்ளதாகவம் ஒருவர் தனது விருப்பத்தின் பேரில் போரில் இணைந்ததாகவும் அரசு தகவல்.
- இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்புர்வ இணையதளத்தின் முதன்மை மொழியாக ஆய்கிலம் இருந்த வந்த நிலையில் முற்றிலும் இந்தி மொழிக்கு மாற்றம்.
- இன்று ஏப்ரல்-25 உலக மலேரியா தினம் அனுசரிக்கப்படுகிறது.















