Connect with us

தமிழ்நாடு

பெரும் நஷ்டத்தில் போக்குவரத்து துறை, மின்துறை: கட்டணம் உயர வாய்ப்பா?

Published

on

பெரும் நஷ்டத்தில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை இருப்பதால் கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் இன்று வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த வெள்ளை அறிக்கையில் அவர் பல்வேறு அம்சங்களை குறிப்பிட்ட நிலையில் மின்சார வாரியம் மற்றும் போக்குவரத்து துறை ஆகிய இரண்டு துறைகளும் மிகப்பெரிய கடனில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு துறைகளுக்கு மட்டும் 2 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது என்றும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் அரசு பேருந்துகளை இயக்க ரூபாய் 59 நஷ்டம் ஏற்படுகிறது என்றும் அவர் வெள்ளை அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதேபோல் மின்சாரத் துறையில் பெரும் கடனில் இருப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து மின் துறை மற்றும் போக்குவரத்து துறையின் கடனை மீட்கும் வகையில் மின்சார கட்டணம் மற்றும் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாத நிலையில் தற்போது பேருந்து கட்டணம் மற்றும் மின் கட்டணத்தை உயர்த்துவதற்காகவே இந்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா என்ற கேள்வியையும் மக்கள் எழுப்பி வருகின்றனர்.

கடந்த ஆட்சியில் பேருந்து கட்டணம், மின்சாரக் கட்டணம், சொத்துவரி உள்ளிட்டவை உயர்த்தவில்லை என்று கூறியிருக்கும் நிதியமைச்சர், அவ்வாறு உயர்த்தி இருந்தால் திமுக போராட்டம் நடத்தாமல் இருந்திருக்குமா? என்ற கேள்வியும் மக்கள் எழுப்பி உள்ளனர்.

வணிகம்14 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?