Connect with us

தமிழ்நாடு

அரசு விரைவுப் பேருந்துகளில் 50% கட்டண சலுகை: அமைச்சரின் சூப்பர் அறிவிப்பு!

Published

on

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளில், ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேலாக முன்பதிவு செய்து பயணம் செய்தால், கட்டண சலுகை வழங்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

50% கட்டண சலுகை

ஒரு மாதத்திற்கு 5 தடவைக்கும் மேலாக முன்பதிவு செய்து பேருந்தில் பயணம் செய்தால், 6 ஆவது தடவை முன்பதிவு செய்து பேருந்தில் பயணம் செய்யும் போது, 50% கட்டண சலுகை வழங்கப்படும் என தமிழ்நாடு சட்டப் பேரவையில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இந்த சலுகையானது அனைத்து அரசு விரைவுப் போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் பொருந்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளில், பொதுமக்களின் பயணத்தை ஊக்குவிப்பதற்கு தமிழக அரசு பல வசதிகளை செய்து வருகிறது. அவ்வகையில், தமிழ்நாட்டில் அதிநவீன மிதவைப் பேருந்து, குளிர்சாதனப் பேருந்து என தொலை தூரங்களில் 1,082 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தமாக 251 வழித்தடங்களில் அரசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பேருந்து பயணத்தை ஊக்குவிக்க கட்டண சலுகையும் அளிப்பதால், பொதுமக்களுக்கு இது ஒரு நல்வாய்ப்பாகும். பொதுவாக ரயில் மற்றும் பேருந்துகளைத் தான் பொதுமக்கள் அதிகமாக பயணம் செய்ய விரும்புகின்றனர். அதிலும் பேருந்து பயணத்தை விட ரயில் பயணத்தில் கட்டணம் குறைவு. இருப்பினும், பேருந்துகளில் பயணம் செய்ய மக்கள் ஆர்வத்துடன் வருகின்றனர்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?