Connect with us

கட்டுரைகள்

செயல்படுவது முதல் சேமிப்பு வரை.. இந்தியாவில் அனுமதி பெற்ற கோவாக்சின்-கோவிஷீல்டு.. என்ன வித்தியாசம்?

Difference between Covishield and Covaxin. Here all you need to know.

Published

on

புதுடெல்லி : கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் மிகப்பெரிய நடவடிக்கையாக இந்திய அரசாங்கம் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 5 கட்டங்களாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் முதல் கட்டத்தில் சுகாதார ஊழியர்கள் முன்கள பணியாளர்கள் உட்பட ஒரு கோடி பேருக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே மத்திய அரசு அனுமதித்தால் கோவிஷீல்டு தடுப்பூசியை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாக சீரம் நிறுவனத்தின் தலைவர் அடார் பூணவல்லா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பு மருந்து முறையான பரிசோதனை முடிவுகள் வெளியாகும் முன்பே அதற்கு அனுமதி வழங்கி விட்டதாக சில அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இருப்பினும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் எதை பயன்படுத்தலாம் எதற்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் இந்திய மருந்து நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் எப்படி செயல்படுகிறது என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி தான் இந்தியாவில் கோவாக்சின் என அழைக்கப்படுகிறது. ஆனால் உலகம் முழுவதிலும் இது AZD1222 என்கிற பெயரில் அறியப்படுகிறது. சிம்பன்சி வகை குரங்குகளில் காணப்படும் அடினோ வைரஸ் என்கிற வகை வைரஸை ஜெனிடிக் முறைப்படி மட்டுப்படுத்தி அதற்குள் கொரோனா வைரஸின் சிதைக்கப்பட்ட மரபணுவை செலுத்துவார்கள். இதனால் இந்த அடினோ வைரஸ் கொரோனா வைரஸ் போல கூம்புகள் பெற்று உருமாறும். ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட மரபணுவை செலுத்தியதால் அதற்கு பலம் இருக்காது. இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு உடலில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் லட்சக்கணக்கான கூம்புகளை உருவாக்குகிறது. அதை நம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் உடனடியாக தாக்கி அழிக்கும் மேலும் அதை எப்படி அழித்தது என்பதையும் நினைவில் வைத்து உண்மையான கொரோனவைரஸ் பாதிப்பு ஏற்படும் பொழுது அதை தாக்குவதற்கு தயார் செய்யும் பணியையும் இந்த தடுப்பூசி செய்கிறது.

அடுத்தது பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி, கொடிய கொரோனா வைரஸின் செயலற்ற வடிவமாக செயல்படும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்தில் அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளியிடம் இருந்து இந்த ஸ்ட்ரைன் பிரித்தெடுக்கப்பட்டது. இந்தியாவின் உள்நாட்டு தடுப்பூசியை தயாரிப்பதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அது பின்னர் வழங்கப்பட்டது. வைரஸின் செயலற்ற வடிவத்தை பயன்படுத்தி எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் உடலுக்குள் நுழைந்தால் அதை தாக்கி அழிக்க நோய் எதிர்ப்பு மண்டலத்தை தயார்படுத்தும் பணியை இந்த தடுப்பூசி செய்கிறது.

எவ்வளவு பயனுள்ளது ?

இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில், ஆக்ஸ்போர்டு பல்கலைகலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி கொரோனா வைரஸ்க்கு எதிராக இந்தியர்களிடம் 70.4 சதவிகிதம் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் வெவ்வேறு டோஸ் செலுத்தப்பட்டு முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டன, அதில் சராசரியாக 70.4 சதவீத செயல்திறனை இந்த தடுப்பூசி காட்டியதும் கண்டறியப்பட்டது.

பாரத் பயோடெக்கின் தடுப்பூசியான கோவாக்சின், சமீபத்தில் வெளியிடப்பட்ட முதல்கட்ட சோதனை முடிவுகளின்படி, பயனுள்ள மற்றும் பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி நாட்டின் பல இடங்களில் இன்னும் 3 ஆம் கட்ட பரிசோதனை நிலையிலேயே உள்ளது, மேலும் நாடு முழுவதும் 23,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்ட மிகப்பெரிய மூன்றாம் கட்ட சோதனையாகவும் இது திகழ்கிறது.

உருமாறிய கொரோனா வைரஸ்க்கு எதிராகவும் செயல்படுமா?

அந்த நிறுவனங்களின் அறிக்கைகளின் படி, இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் பிரிட்டனில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்க்கு எதிராக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாக்சினின் புரதக் கூறுகள் உருமாற்றங்களையும் கவனிக்கும் என்று பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதேபோன்று அஸ்ட்ராஜெனெகா தலைமை நிர்வாக அதிகாரியும், தடுப்பூசி கொரோனா வைரஸின் உருமாற்றங்களுக்கும் எதிராக திறம்பட செயல்படும் என்று கூறியுள்ளார். ஆனால் தென் ஆப்ரிக்காவில் பரவி வரும் மற்றொரு வகை கொரோனாவுக்கு எதிராக செயல்படுமா என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

எத்தனை டோஸ்கள் தேவைப்படும் :

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் ஒருவருக்கு இரண்டு டோஸ்கள் வழங்கப்படும். ஆனால் எத்தனை வாரங்கள் இடைவெளியில் அவை செலுத்தப்படும் என்பதை இன்னமும் எந்த நிறுவனங்களும் இன்னமும் உறுதி செய்யவில்லை.

எவ்வளவு வெப்பநிலையில் வைக்க வேண்டும்:

இது முக்கியமான ஒன்று. ஏனெனில் ஃபைசர் போன்ற நிறுவனங்களின் தடுப்பூசியை போல -70 டிகிரியில் சேமிப்பு நிலைமைகள் தேவைப்பட்டால் இந்தியா போன்ற நாடுகளுக்கு அந்த குளிர் நிலையில் தடுப்பூசிகளை சேமிப்பது மற்றும் விநியோகம் செய்வதற்கு பெரும் சிக்கல் ஏற்படும். ஆனால், நல்வாய்ப்பாக இந்த இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளும் சாதாரண குளிர்பதன நிலையில் சேமித்து வைக்க முடியும்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?