Connect with us

கட்டுரைகள்

செயல்படுவது முதல் சேமிப்பு வரை.. இந்தியாவில் அனுமதி பெற்ற கோவாக்சின்-கோவிஷீல்டு.. என்ன வித்தியாசம்?

Difference between Covishield and Covaxin. Here all you need to know.

Published

on

புதுடெல்லி : கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தின் மிகப்பெரிய நடவடிக்கையாக இந்திய அரசாங்கம் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 5 கட்டங்களாக தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் முதல் கட்டத்தில் சுகாதார ஊழியர்கள் முன்கள பணியாளர்கள் உட்பட ஒரு கோடி பேருக்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே மத்திய அரசு அனுமதித்தால் கோவிஷீல்டு தடுப்பூசியை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளதாக சீரம் நிறுவனத்தின் தலைவர் அடார் பூணவல்லா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பு மருந்து முறையான பரிசோதனை முடிவுகள் வெளியாகும் முன்பே அதற்கு அனுமதி வழங்கி விட்டதாக சில அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இருப்பினும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் எதை பயன்படுத்தலாம் எதற்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் இந்திய மருந்து நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் எப்படி செயல்படுகிறது என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி தான் இந்தியாவில் கோவாக்சின் என அழைக்கப்படுகிறது. ஆனால் உலகம் முழுவதிலும் இது AZD1222 என்கிற பெயரில் அறியப்படுகிறது. சிம்பன்சி வகை குரங்குகளில் காணப்படும் அடினோ வைரஸ் என்கிற வகை வைரஸை ஜெனிடிக் முறைப்படி மட்டுப்படுத்தி அதற்குள் கொரோனா வைரஸின் சிதைக்கப்பட்ட மரபணுவை செலுத்துவார்கள். இதனால் இந்த அடினோ வைரஸ் கொரோனா வைரஸ் போல கூம்புகள் பெற்று உருமாறும். ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட மரபணுவை செலுத்தியதால் அதற்கு பலம் இருக்காது. இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு உடலில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் லட்சக்கணக்கான கூம்புகளை உருவாக்குகிறது. அதை நம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் உடனடியாக தாக்கி அழிக்கும் மேலும் அதை எப்படி அழித்தது என்பதையும் நினைவில் வைத்து உண்மையான கொரோனவைரஸ் பாதிப்பு ஏற்படும் பொழுது அதை தாக்குவதற்கு தயார் செய்யும் பணியையும் இந்த தடுப்பூசி செய்கிறது.

அடுத்தது பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி, கொடிய கொரோனா வைரஸின் செயலற்ற வடிவமாக செயல்படும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்தில் அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளியிடம் இருந்து இந்த ஸ்ட்ரைன் பிரித்தெடுக்கப்பட்டது. இந்தியாவின் உள்நாட்டு தடுப்பூசியை தயாரிப்பதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அது பின்னர் வழங்கப்பட்டது. வைரஸின் செயலற்ற வடிவத்தை பயன்படுத்தி எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் உடலுக்குள் நுழைந்தால் அதை தாக்கி அழிக்க நோய் எதிர்ப்பு மண்டலத்தை தயார்படுத்தும் பணியை இந்த தடுப்பூசி செய்கிறது.

எவ்வளவு பயனுள்ளது ?

இதுவரை வெளியான தரவுகளின் அடிப்படையில், ஆக்ஸ்போர்டு பல்கலைகலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி கொரோனா வைரஸ்க்கு எதிராக இந்தியர்களிடம் 70.4 சதவிகிதம் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் வெவ்வேறு டோஸ் செலுத்தப்பட்டு முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டன, அதில் சராசரியாக 70.4 சதவீத செயல்திறனை இந்த தடுப்பூசி காட்டியதும் கண்டறியப்பட்டது.

பாரத் பயோடெக்கின் தடுப்பூசியான கோவாக்சின், சமீபத்தில் வெளியிடப்பட்ட முதல்கட்ட சோதனை முடிவுகளின்படி, பயனுள்ள மற்றும் பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி நாட்டின் பல இடங்களில் இன்னும் 3 ஆம் கட்ட பரிசோதனை நிலையிலேயே உள்ளது, மேலும் நாடு முழுவதும் 23,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களைக் கொண்ட மிகப்பெரிய மூன்றாம் கட்ட சோதனையாகவும் இது திகழ்கிறது.

உருமாறிய கொரோனா வைரஸ்க்கு எதிராகவும் செயல்படுமா?

அந்த நிறுவனங்களின் அறிக்கைகளின் படி, இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளும் பிரிட்டனில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்க்கு எதிராக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாக்சினின் புரதக் கூறுகள் உருமாற்றங்களையும் கவனிக்கும் என்று பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதேபோன்று அஸ்ட்ராஜெனெகா தலைமை நிர்வாக அதிகாரியும், தடுப்பூசி கொரோனா வைரஸின் உருமாற்றங்களுக்கும் எதிராக திறம்பட செயல்படும் என்று கூறியுள்ளார். ஆனால் தென் ஆப்ரிக்காவில் பரவி வரும் மற்றொரு வகை கொரோனாவுக்கு எதிராக செயல்படுமா என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

எத்தனை டோஸ்கள் தேவைப்படும் :

கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் ஒருவருக்கு இரண்டு டோஸ்கள் வழங்கப்படும். ஆனால் எத்தனை வாரங்கள் இடைவெளியில் அவை செலுத்தப்படும் என்பதை இன்னமும் எந்த நிறுவனங்களும் இன்னமும் உறுதி செய்யவில்லை.

எவ்வளவு வெப்பநிலையில் வைக்க வேண்டும்:

இது முக்கியமான ஒன்று. ஏனெனில் ஃபைசர் போன்ற நிறுவனங்களின் தடுப்பூசியை போல -70 டிகிரியில் சேமிப்பு நிலைமைகள் தேவைப்பட்டால் இந்தியா போன்ற நாடுகளுக்கு அந்த குளிர் நிலையில் தடுப்பூசிகளை சேமிப்பது மற்றும் விநியோகம் செய்வதற்கு பெரும் சிக்கல் ஏற்படும். ஆனால், நல்வாய்ப்பாக இந்த இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளும் சாதாரண குளிர்பதன நிலையில் சேமித்து வைக்க முடியும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

இந்தியா7 மணி நேரங்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா11 மணி நேரங்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

இந்தியா6 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.04.2026

வணிகம்5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/04/2026)!

வணிகம்6 நாட்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது? நிதியமைச்சரிடம் அவசர கோரிக்கை!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 11.04.2026

சினிமா5 நாட்கள் ago

TN 2026 திரை விமர்சனம்: அரசியல் சாட்டையுடன் வந்த படம் – பலம் இருந்தும் பலவீனம் காட்டிய கிளைமேக்ஸ்!

வணிகம்5 நாட்கள் ago

RBI புதிய விதிகள்: ஆன்லைன் மோசடிகளை தடுக்க 1 மணி நேர ‘கூலிங் பீரியட்’ – உங்கள் பணம் இப்போது பாதுகாப்பா?

Translate »
Wie kann ich erkennen, ob ein rinderhaut kauknochen für meinen hund geeignet ist ?. Start using the free link building tool today by installing the wordpress plugin. Surowce do produkcji suplementów diety.