Connect with us

தமிழ்நாடு

வணக்கம் என்று சொல்லி தமிழ்நாட்டு மக்களை முடியாது: பிரதமர் மீது முதல்வர் சரமாறி குற்றச்சாட்டு

Published

on

வணக்கம் என்று தமிழில் சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என முதலமைச்சர் முக ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடி மீது சரமாரியாக கூறிய குற்றச்சாட்டுகள் இதோ:

வணக்கம் என்று சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிடலாம் என நினைக்கிறீர்கள்தமிழ்நாட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள். நீங்களும் குஜராத் முதலமைச்சராக இருந்து கொண்டுதானே இப்போது பிரதமராக வந்திருக்கிறீர்கள்? அப்போது மாநில உரிமைகளை பற்றி நீங்கள் பேசவில்லையா? இப்போது அதெல்லாம் மறந்துவிட்டதா? தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்கு எப்போதும் எதிரானவர்கள்தான் இந்த பாஜகவும், அதிமுகவும்.

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி Union of States என்று சொன்னதுக்கு பிரதமர் மோடி ஏன் கோவித்துக்கொள்கிறார்? அரசியலமைப்பு சட்டத்தில் இருப்பதைதானே அவர் சொல்கிறார். நில அரசிடம் இவர்கள் விட்டுவைத்துள்ள ஒரே வருவாய் ஆதாரமே பத்திரப்பதிவு மட்டும்தான்; அதையும் ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு என கொண்டு வந்து மாநில நிதியில் கைவைத்து விழுங்கி ஏப்பம் விட பார்க்கிறார்கள்.

ஜி.எஸ்.டி. நிலுவை தொகையும், பேரிடர் நிவாரண நிதியும், தமிழ்நாட்டுக்கான திட்டங்களும் எங்கே? இதுக்கெல்லாம் உங்களிடம் இருந்து பதில் வராது; ஆனா, வணக்கம்னு சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஏமாத்திடலாம்னு நினைக்கிறீங்க. தமிழ்நாட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள்.

மழை, வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதி வேண்டி பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன்; இதுவரை அந்த நிதி வரவில்லை; எப்போது வருமென்றும் தெரியவில்லை; இந்த லட்சணத்தில் ஒன்றிய அமைச்சரெல்லாம் நேரில் வந்து பார்த்தார்கள்.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்

என்ற திருக்குறளை சொல்லி குமரி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து மேற்கொண்ட பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடித்துக்கொண்டார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?