Connect with us

சினிமா செய்திகள்

பாடிக்கொண்டு இருந்த பென்னி தயாள்.. தலையில் மோதிய ட்ரோன்.. நடந்தது என்ன?

Published

on

சமீபத்தில் பின்னணி பாடகர் பென்னி தயாள் சென்னையில் நடந்த இசை விழா ஒன்று பாடல் பாடி கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக அவருக்கு விபத்து ஏற்பட்டது. நிகழ்ச்சியை படம் பிடித்துக் கொண்டிருந்த ட்ரோன் ஒன்று பென்னி தயாளின் தலைக்கு மேல் பறந்து வந்து கொண்டிருந்தது. அது அவருடைய தலையின் பின் பகுதியில் எதிர்பாராத விதமாக மோதியது.

இதனால் துணுக்குற்ற பென்னி தயாள், மேடையிலேயே கீழே அமர்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சிறு விபத்திற்கு பிறகு என்ன நடந்தது எப்படி இருக்கிறேன் என்பது குறித்து பென்னி தயாள் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “அந்த விபத்திற்கு பிறகு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னை மிகுந்த சிரத்தையுடன் கவனித்துக் கொண்டனர். அதற்கு அவர்களுக்கு நன்றி. அந்த ட்ரோன் என்னுடைய தலையின் பின் பகுதியில் மோதியது. அதை தடுப்பதற்காக தலையை கையை மேலே கொண்டு சென்ற போது விரல்களிலும் அடிபட்டது. இதிலிருந்து சீக்கிரம் குணமாகி விடுவேன். உங்கள் அனைவரின் அன்புக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி.

என் பெற்றோருக்கும் நன்றி. இதற்குப் பிறகு எல்லா கலைஞர்களுக்கும் கவனமாக இருக்க வேண்டும் என ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இது போன்ற நிகழ்ச்சிகளில் நீங்கள் பாடி கொண்டிருக்கும் பொழுது, இது போன்ற ட்ரோன் உங்கள் அருகில் வராமல் இருக்கிறதா என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஏனெனில் பாடி கொண்டிருக்கும் பொழுது உங்களுடைய அசைவுகளும் அவர்களுடைய இயக்கமும் ஒரே மாதிரியாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. இதுபோன்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவர்கள் சான்றிதழ் பயிற்சி பெற்ற ட்ரோன் ஆப்ரேட்டர்களை நியமியுங்கள்.

ஏனெனில் இது போன்ற விபத்து மிகவும் ஆபத்தானது. மூன்றாவது கோரிக்கை நாங்கள் வெறும் கலைஞர்கள் மட்டுமே! விஜய்யோ அஜித் சல்மான்கானோ பிரபாஸோ கிடையாது. நாங்கள் ஏதும் ஆக்ஷன் காட்சிகள் செய்யவில்லை. நாங்கள் பாடல் பாடிக்கொண்டிருக்கிறோம். அதை நீங்கள் நன்றாக படம் பிடித்தால் மட்டும் போதும். இவ்வளவு நெருக்கத்தில் வர வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதை மட்டும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்” என அந்த வீடியோவில் பென்னி தயாள் குறிப்பிட்டுள்ளார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?