Connect with us

சினிமா

சூர்யா படத்தோல்வி எதிரொலி; அமைதி காக்கும் இயக்குநர்!

Published

on

சூர்யா படத்தோல்வியால் பிரபல இயக்குநர் தனது அடுத்தப் படம் குறித்து இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார்.

‘மெரினா’, ‘பசங்க’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் பாண்டிராஜ். நடிகர் கார்த்தியின் சினிமா பயணத்தில் இவர் கொடுத்த ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் அதிகமான ஃபேமிலி ஆடியன்ஸை அவருக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடிகர் சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை இவர் இயக்கியிருந்தார். படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியை அடைந்தது. இது தயாரிப்பு தரப்புக்கு தோல்வியை கொடுத்துள்ள ஒரு படம் என்றும் பாண்டிராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டார்.

இந்த நிலையில் படம் வெளியாகி பல மாதங்கள் ஆன பின்பும் இன்னும் அவர் தனது அடுத்த படம் குறித்து அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். நடிகர் சூர்யாவை தொடர்ந்து மீண்டும் கார்த்தியை இயக்குவதற்கு கதை சொல்லிவிட்டு அவரது தேதிக்காக காத்திருந்தார் பாண்டிராஜ். ஆனால், நடிகர் கார்த்தி தற்போது ‘ஜப்பான்’, ‘சர்தார்2’ உள்ளிட்டப் படங்களில் பிஸியாக இருப்பதால் பாண்டிராஜுக்கு பதில் தராமல் போகவே, விஷாலை அணுகி இருக்கிறார். விஷால் சம்மதம் தெரிவித்த போதும் அவர் தற்பொழுது அடுத்தடுத்து பிரச்சினைகளில் சிக்கி வருவதால் அவர் வேண்டாம் என பாண்டிராஜ் தரப்பு ஒதுங்கி இருக்கிறது.

இதனை அடுத்து தற்போது வெளியாகியுள்ள ‘விடுதலை’ படத்தின் மூலம் நடிகர் சூரி கதையின் நாயகனாக மிகப்பெரிய கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். சூரியும் பாண்டிராஜூம் நெருக்கமானவர்கள் என்பதால் சூரியை வைத்து தற்பொழுது ஒரு படம் இயக்க முடிவு செய்து இருக்கிறார் பாண்டிராஜ். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம். நடிகர் சூரி ‘விடுதலை’ படத்திற்கு பிறகு ‘கொட்டுக்காளி’ படத்தில் பிசியாக இருக்கிறார். இதற்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்களை குறைத்துக் கொண்டு கதையில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலேயே நடிகர் சூரி அதிகம் நடிப்பார் எனத் தெரிகிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?