சினிமா செய்திகள்
பாலாவை தொடர்ந்து நடிகை மேகாவையும் கழட்டி விட்ட வர்மா படக்குழு!

விஜய்தேவரகொண்டா – ஷாலினி பாண்டே நடிப்பில் தெலுங்கில் வெளியாகி 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலை ஈட்டிய அர்ஜுன் ரெட்டி, படத்தை தமிழில் ரீமேக் செய்து அதில் அறிமுகமாகும் திட்டத்தை நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தனது தந்தையிடம் தெரிவித்தார்.

தன்னைப் போலவே, தனது மகன் துருவ்வும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் என எண்ணிய சீயான் விக்ரம், அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கை பாலாவை இயக்கும் படி கேட்டுக் கொண்டார்.
வர்மா என்ற தலைப்பில் உருவான இந்த படத்தை ஈ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வந்தது.
படம் முழுவதுமாக எடுக்கப்பட்டு ரிலீசுக்கு ரெடியாகி இருந்த நிலையில், படத்தை பார்த்த தயாரிப்பு நிறுவனம் இது தாங்கள் நினைத்தது போல உருவாகவில்லை எனக் கூறி, படத்திலிருந்து இயக்குநர் பாலாவை அதிரடியாக வெளியேற்றியது.
புதிய இயக்குநர் கொண்டு மறுபடியும் புதிதாக படத்தை இயக்கப்போவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில், தற்போது படத்தின் நாயகியாக நடித்த மேகாவை படத்திலிருந்து தூக்கி விட்டனர். பாவம் துருவ் விக்ரம் கொடுத்த அத்தனை லிப் லாக் முத்தங்களையும் வாங்கி நடித்த மேகா, தற்போது படத்திலிருந்து வெளியேறி உள்ளார்.
அக்டோபர் படம் மூலம் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகியுள்ள பனிடா சந்துவை தற்போது துருவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாக்கியுள்ளனர் படத்தின் தயாரிப்பாளர்கள்.
இந்த படத்தை இயக்க கெளதம் மேனனை அணுகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மீண்டும் எப்படி எடுக்கப்பட்டு, எப்போது வெளியாகுமோ வர்மா? எப்போது தமிழில் அறிமுகமாவாரோ துருவ் விக்ரம் என கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுத்து வருகின்றன.

















