தமிழ்நாடு
ஆவின், டாஸ்மாக் விலை உயர்வுக்கு அண்ணாமலை கண்டனம்: பெட்ரோல் விலை உயர்ந்தாலும் கண்டிப்பாரா?
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்து அதன் முடிவுகள் வெளிவந்தவுடன் ஆவின் பொருட்கள் மற்றும் டாஸ்மாக் விலையை கடுமையாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது.
இதற்கு ஆளும் கூட்டணி கட்சிகளிடம் இருந்து எந்தவிதமான கண்டனமும் தெரிவிக்காத நிலையில் வழக்கம் போல் பாஜக மட்டுமே இந்த விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் ஆவின் விலை உயர்ந்தது. நெய் முதல் தயிர் வரை விலை உயர்ந்தது. இப்போது டாஸ்மாக்கில் குவாட்டர் முதல் பீர் வரை விலை உயர்ந்துள்ளது. ஒருவழியாக திமுக உறுதியளித்த விடியல் ஆட்சியை நாம் பெற்றுவிட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்றுடன் 5 மாநில தேர்தல் முடிவடைந்ததை அடுத்து நாளை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்று கூறப்பட்டு வருகிறது. ஒருவேளை நாளை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தாலும் தேர்தலுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவிப்பாரா? என்ற கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
After the local body elections in Tamil Nadu,
AAVIN has increased the prices from Ghee to Curd!
TASMAC (our liquor outlets) is increasing the price from quarter bottle to beer!
Looks like finally we are getting ‘Vidiyal Aatchi – விடியல் ஆட்சி’ in TN as promised by @arivalayam
— K.Annamalai (@annamalai_k) March 7, 2022