Connect with us

இந்தியா

அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நடத்தலாம்: நீதிமன்றம் தீர்ப்பு

Published

on

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு எதிரான புகார்களுக்கு விசாரணை நடத்தலாம் என கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இகாமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மிக அதிகமாக விலையை குறைத்து விற்பனை செய்வதால் தங்களுடைய வியாபாரம் பாதிப்பதாக வணிகர் சங்கங்கள் இந்திய போட்டி ஆணையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை விசாரிக்க கூடாது என கர்நாடக மாநில நீதிமன்றத்தில் அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் மனு அளித்தன. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை அடுத்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் மீண்டும் இதே மனுவை அளித்தன.

இந்த மனு விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் இந்திய போட்டி ஆணையத்தின் விசாரணையை ஆரம்ப கட்டத்திலேயே முடக்குவது சரியாக இருக்காது என்றும், அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களின் அணுகுமுறைம் விசாரணை இறுதி கட்டத்தை வரக்கூடாது என்று உள்ளதாக தெரிகிறது என்றும் தெரிவித்தது.

எனவே இந்த இரு நிறுவனங்களின் மனு விசாரணைக்கு கருத்தல்ல என்று மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனை அடுத்து அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களின் மீது இந்திய போட்டி ஆணையம் விசாரணையை தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்8 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?