சினிமா செய்திகள்
நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா தொற்று உறுதி.. அதிர்ச்சியில் திரை உலகினர்!
மலையாள நடிகர் மம்மூட்டிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எனவே அவரது ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டி. இப்போது மம்மூட்டி சிபிஐ 5 என படத்தில் நடித்து வருகிறார். இப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
எனவே மம்மூட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர். படப்பிடிப்பில் மம்மூட்டியுடன் இருந்தவர்களையும் தனிமனை படுத்திக்கொள்ளக் கூறப்பட்டுள்ளது.
சிபிஐ 5 படப்பிடிப்பும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.