Connect with us

இந்தியா

கேர்ள் பிரண்ட் கிட்ட பேசாதே.. காதலி “EXன்” ஆணுறுப்பை வெட்டி.. கொன்ற காதலன் .. என்ன நடந்தது?

Published

on

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலின் முன்னாள் காதலன் ஆணுறுப்பை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் நவீன். இவர் தில்சுக்ஹ்நகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். அதே கல்லூரியில் ஹரிஹரி கிருஷ்ணா என்ற இளைஞரும் படித்து வந்துள்ளார். நவீன் அதே கல்லூரியில் படிக்கும் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

2 வருடமாக காதலித்த அவர்கள் சில மாதங்களுக்கு முன் பிரிந்துவிட்டனர். இதையடுத்து ஹரிஹரி கிருஷ்ணாவும் அந்த பெண்ணும் காதலிக்க தொடங்கி உள்ளனர். நவீன், ஹரிஹரி கிருஷ்ணா இருவரும் நண்பர்கள்தான். ஆனால் இந்த காதல் காரணமாக இருவருக்கும் இடையில் மோதல் வந்துவிட்டது.

இதனால் இருவரும் பேசுவதை நிறுத்தி உள்ளனர். இதையடுத்து ஹரிஹரி கிருஷ்ணா காதலியுடன் சந்தோசமாக இருந்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக ஹரிஹரி கிருஷ்ணாவின் காதலி மீண்டும் நவீனுடன் பேச தொடங்கி உள்ளார்.

முன்னாள் காதலனுடன் அடிக்கடி பேச தொடங்கி உள்ளார். ஹரிஹரி கிருஷ்ணாவுடன் மோதல் வரும் போதெல்லாம் அவர் முன்னாள் காதலனுடன் பேச தொடங்கி உள்ளார். நவீன் இப்படி தனது காதலியிடம் பேசுவதை ஹரிஹரி கிருஷ்ணா விரும்பவில்லை. இதையடுத்து ஹரிஹரி கிருஷ்ணா நவீனை அழைத்து சண்டை போட்டுள்ளார் .

இதையடுத்து இவர்களுக்கு இடையில் சமாதானம் செய்ய கடந்த பிப்ரவரி 17ம் தேதி பார்ட்டி ஒன்று நடத்தப்பட்டு உள்ளது. இதில் இருவருக்கும் மீண்டும் சண்டை வரவே நவீனை தனியாக அழைத்து சென்று ஹரிஹரி கிருஷ்ணா தாக்கி உள்ளார். அதோடு நவீன் ஆணுறுப்பை வெட்டி அவரை கொலை செய்துள்ளார். அந்த ஆணுறுப்பை புகைப்படம் எடுத்து தனது காதலிக்கும் அனுப்பி உள்ளார்.

இதையடுத்து நவீன் உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் இத்தனை நாட்களாக ஹரிஹரி கிருஷ்ணாவை தேடி வந்த நிலையில் நேற்று ஹரிஹரி கிருஷ்ணா போலீசில் சரண் அடைந்து குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?