இந்தியா

கேர்ள் பிரண்ட் கிட்ட பேசாதே.. காதலி “EXன்” ஆணுறுப்பை வெட்டி.. கொன்ற காதலன் .. என்ன நடந்தது?

Published

on

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இளைஞர் ஒருவர் தனது காதலின் முன்னாள் காதலன் ஆணுறுப்பை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் நவீன். இவர் தில்சுக்ஹ்நகர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். அதே கல்லூரியில் ஹரிஹரி கிருஷ்ணா என்ற இளைஞரும் படித்து வந்துள்ளார். நவீன் அதே கல்லூரியில் படிக்கும் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

2 வருடமாக காதலித்த அவர்கள் சில மாதங்களுக்கு முன் பிரிந்துவிட்டனர். இதையடுத்து ஹரிஹரி கிருஷ்ணாவும் அந்த பெண்ணும் காதலிக்க தொடங்கி உள்ளனர். நவீன், ஹரிஹரி கிருஷ்ணா இருவரும் நண்பர்கள்தான். ஆனால் இந்த காதல் காரணமாக இருவருக்கும் இடையில் மோதல் வந்துவிட்டது.

இதனால் இருவரும் பேசுவதை நிறுத்தி உள்ளனர். இதையடுத்து ஹரிஹரி கிருஷ்ணா காதலியுடன் சந்தோசமாக இருந்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக ஹரிஹரி கிருஷ்ணாவின் காதலி மீண்டும் நவீனுடன் பேச தொடங்கி உள்ளார்.

முன்னாள் காதலனுடன் அடிக்கடி பேச தொடங்கி உள்ளார். ஹரிஹரி கிருஷ்ணாவுடன் மோதல் வரும் போதெல்லாம் அவர் முன்னாள் காதலனுடன் பேச தொடங்கி உள்ளார். நவீன் இப்படி தனது காதலியிடம் பேசுவதை ஹரிஹரி கிருஷ்ணா விரும்பவில்லை. இதையடுத்து ஹரிஹரி கிருஷ்ணா நவீனை அழைத்து சண்டை போட்டுள்ளார் .

இதையடுத்து இவர்களுக்கு இடையில் சமாதானம் செய்ய கடந்த பிப்ரவரி 17ம் தேதி பார்ட்டி ஒன்று நடத்தப்பட்டு உள்ளது. இதில் இருவருக்கும் மீண்டும் சண்டை வரவே நவீனை தனியாக அழைத்து சென்று ஹரிஹரி கிருஷ்ணா தாக்கி உள்ளார். அதோடு நவீன் ஆணுறுப்பை வெட்டி அவரை கொலை செய்துள்ளார். அந்த ஆணுறுப்பை புகைப்படம் எடுத்து தனது காதலிக்கும் அனுப்பி உள்ளார்.

இதையடுத்து நவீன் உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் இத்தனை நாட்களாக ஹரிஹரி கிருஷ்ணாவை தேடி வந்த நிலையில் நேற்று ஹரிஹரி கிருஷ்ணா போலீசில் சரண் அடைந்து குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

Trending

Exit mobile version