தமிழ்நாடு
குடும்பம் ஒன்றுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு: சட்டசபையில் ஆளுநர் அறிவிப்பு!

வரும் 15-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக குடும்பம் ஒன்றுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தமிழக சட்டசபையில் அறிவித்துள்ளார்.
2019-ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. முதல் நாள் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று சட்டசபையில் உரையாற்றினார். அப்போது, அனைவருக்கும் காலை வணக்கம், புத்தாண்டு வாழ்த்துக்கள். அனைவரும் எளிமையான வாழ்க்கை வாழுங்கள், இது ஊழலை அகற்றிவிடும். இதுவே எனது செய்தி என தமிழில் தனது உரையைத் தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
தொடர்ந்து பேசிய ஆளுநர், பொங்கல் பரிசுப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பை இந்த அரசு வழங்க உள்ளது. இது தவிர ஒவ்வொரு குடும்பத்திற்கும் பொங்கல் விழாவைக் கொண்டாட 1000 ரூபாய் இந்த அரசால் வழங்கப்படும் என்றார். மேலும் , திருவாரூரில் இடைத் தேர்தல் நடக்க இருப்பதால் அங்கு தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு திருவாரூர் மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள இந்த பொங்கல் பரிசு என விளக்கமாக தெரிவித்தார்.


















