Connect with us

தமிழ்நாடு

பிறந்த பச்சிளங்குழந்தை கடத்தல்: ஒரே நாளில் மீட்ட போலீஸார்!

Published

on

தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று கடத்தப்பட்ட நிலையில் அந்த குழந்தையை தஞ்சை போலீசார் ஒரே நாளில் மீட்டுள்ளனர்
தஞ்சை அரசு மருத்துவமனையில் ராஜலட்சுமி என்ற பெண் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனை அடுத்து அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த நிலையில் பெண் ஒருவர் ராஜலட்சுமி உடன் அன்பாக பழகி அவருக்கு சில உதவிகளையும் செய்து உள்ளார்

இதனை அடுத்து அந்த பெண்ணை நம்பிய ராஜலட்சுமி, குழந்தையை அவரிடம் கொடுத்து விட்டு குளிக்க சென்றுள்ளார். குளித்துவிட்டு திரும்பி வந்தபோது குழந்தையையும் அந்த பெண்ணையும் காணவில்லை என்றதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டது

காவல்துறையினர் மருத்துவமனை மற்றும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து அந்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் அந்தப் பெண் குழந்தையை ஒரு கட்டை பையில் போட்டு மருத்துவமனைக்கு வெளியே உள்ள ஆட்டோவில் ஏறி சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.

இதனையடுத்து அந்த ஆட்டோ டிரைவரிடம் விசாரித்தபோது அந்த பெண் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இறங்கியதாகவும் அங்கிருந்து பட்டுக்கோட்டை செல்லும் பஸ்சில் பேருந்தில் சென்றதாகவும் தெரியவந்தது. இதனையடுத்து பட்டுக்கோட்டைக்கு சென்ற காவல்துறையினர் அந்த பெண்ணை கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் மேலும் பல குழந்தைகளை அந்த பெண் கடத்தி உள்ளாரா? என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது

பிறந்து மூன்று நாள் ஆன பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டு ஒரே நாளில் குழந்தையை மீட்டதற்கு அந்த பகுதியில் உள்ள காவல் துறையினருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?